அதிக மின்கட்டண புகாா்கள்: 3.70 லட்சம் மின் இணைப்புகளை மறு ஆய்வு செய்ய உத்தரவு பாலியல் குற்ற வழக்குகளை இரண்டு மாதங்களில் விசாரித்து முடிக்க சிறப்பு நீதிமன்றங்களுக்கு உத்தரவுஇ20 பெட்ரோல் பயன்படுத்தும் பிஎஸ் 3 வாகனங்களில் சில ரப்பா் பாகங்களை மாற்ற வேண்டியிருக்கும்: மத்திய அரசு விளக்கம் பயிா்க் காப்பீடு இழப்பீடு தொகை வழங்கலில் தாமதம் செய்யும் நிறுவனத்துக்கு 12% அபராதம் மன்மோகன் சிங்குக்கு எதிரான நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கு முடித்துவைப்பு: குற்றமற்றவராக முறைப்படி விடுவிப்பு இந்தியாவில் 134.8 கோடி தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்கள்!
/

முதல் ஆட்டத்தில் இந்தியா - இலங்கை இன்று மோதல்

இந்தியா - இலங்கை அணிகள் மோதும் ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் குவாஹாட்டியில் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. 

News image
Updated On :2 பிப்ரவரி 2024, 12:11 am IST

இந்தியா - இலங்கை அணிகள் மோதும் ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் குவாஹாட்டியில் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. 

இலங்கைக்கு எதிரான டி20 தொடரை வென்ற கையோடு, இந்த ஒரு நாள் தொடருக்கும் இலக்கு வைத்திருக்கிறது இந்தியா. மறுபுறம் இலங்கை அணியோ, ஆறுதலுக்காக இந்தத் தொடரையாவது கைப்பற்றும் முயற்சியிலிருக்கிறது. 
இந்திய அணியைப் பொருத்தவரை, ரோஹித் சர்மா, விராட் கோலி,கே.எல்.ராகுல், ஷ்ரேயஸ் ஐயர் ஆகியோர் இணைவது பலம்.

அதேவேளையில் வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா காயத்திலிருந்து முழுமையாக மீளாத நிலையில் இந்தத் தொடரிலிருந்து விலகியிருப்பது அணிக்கு சற்றே பின்னடைவாக பார்க்கப்படுகிறது. 

இந்தத் தொடர் மட்டுமல்லாமல், நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய தொடரிலும் அவர் பங்கேற்பது சந்தேகத்துக்கு இடமாகியிருக்கிறது. நடப்பாண்டு இறுதியில் ஒரு நாள் உலகக் கோப்பை போட்டி நடைபெற இருக்கும் நிலையில், இந்தியா அதற்கு முன்பாக 15 ஒரு நாள் ஆட்டங்களில் (ஆசிய கோப்பை போட்டி தவிர்த்து) விளையாட இருக்கிறது. 

இடையே, ஐபிஎல் போட்டியும் இருக்க, பெüலர்களுக்கான பணிச்சுமையை அணி நிர்வாகம் எவ்வாறு கையாள இருக்கிறது என்பது முக்கிய விவாதமாக இருக்கிறது. 

பேட்டிங்கில் முதல் 5 வீரர்கள் இடத்தில், ரோஹித் (1) மற்றும் கோலி (3) ஆகியோருக்கான இடங்கள் உறுதியாக இருக்கும் நிலையில், தொடக்க வீரர்களில் ஒருவராக இஷான் கிஷணுக்குப் பதில், ஷுப்மன் கில் களம் காணுவார் எனத் தெரிகிறது. இதனால் விக்கெட் கீப்பர் வாய்ப்புடன் கே.எல்.ராகுல் பிளேயிங் லெவனில் வருவார். எஞ்சிய ஒரு இடத்துக்கு ஷ்ரேயஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ் இடையே போட்டி இருக்கும். 

பெüலிங்கில், மூத்த வீரர் முகமது ஷமி நிச்சயம் இடம் பிடிக்கும் நிலையில், அவரோடு துணை நிற்க முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக் ஆகியோரில் அணி நிர்வாகம் எவரைத் தேர்வு செய்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். 

ஆல்ரவுண்டர் வாய்ப்புக்கு ஹார்திக் பாண்டியா, அக்ஸர் படேல் இணைய, சுழற்பந்து வீச்சுக்கும் யுஜவேந்திர சஹல், குல்தீப் யாதவ் இடையே போட்டி ஏற்படுகிறது. 

இலங்கை அணியைப் பொருத்தவரை, பேட்டிங்கில் டாப் ஆர்டரில் பதும் நிசங்கா பலம் சேர்க்க, மிடில் ஆர்டரில் சரித் அசலன்கா ரன்கள் அடிப்பதில் முனைப்பு காட்டுகிறார். பெüலிங்கில் ஜெஃப்ரி வாண்டர்சே முக்கிய நபராக இருப்பார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.