செளராஷ்டிர அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை ஆட்டத்தில் தமிழ்நாடு அணி முதல் இன்னிங்ஸில் 324 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது.
தமிழ்நாடு - செளராஷ்டிர அணிகளுக்கு இடையிலான ரஞ்சி கோப்பை ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் செவ்வாயன்று தொடங்கியுள்ளது. செளராஷ்டிர அணியின் கேப்டனாக ஜடேஜா செயல்படுகிறார்.
முதல் நாளன்று நிதானமாக விளையாடிய தமிழ்நாடு அணி, 4 விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் எடுத்தது. பாபா இந்திரஜித் 45, விஜய் சங்கர் 11 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். 2-ம் நாளில் தமிழ்நாடு அணி முதல் இன்னிங்ஸில் 142.4 ஓவர்களில் 324 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திரஜித் 66, விஜய் சங்கர் 53, ஷாருக் கான் 50 ரன்கள் எடுத்தார்கள்.
காயத்திலிருந்து மீண்டு வந்து முதல்தர கிரிக்கெட்டில் விளையாடும் ஜடேஜா, 24 ஓவர்கள் வீசி 48 ரன்கள் கொடுத்து 1 விக்கெட் எடுத்தார். யுவ்ராஜ்சிங் 4, டிஏ ஜடேஜா 3 விக்கெட்டுகளையும் எடுத்தார்கள்.