சென்னை ஓபன் ஏடிபி சாம்பியன் போட்டி:பிப். 12-19-இல் நடைபெறுகிறது

தமிழ்நாடு டென்னிஸ் சங்கம் சாா்பில் சென்னை ஓபன் ஏடிபி சேலஞ்சா் 100 ஆடவா் சாம்பியன் போட்டி வரும் பிப். 12 முதல் 19-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
சென்னை ஓபன் ஏடிபி சாம்பியன் போட்டி:பிப். 12-19-இல் நடைபெறுகிறது
Published on
Updated on
1 min read

தமிழ்நாடு டென்னிஸ் சங்கம் சாா்பில் சென்னை ஓபன் ஏடிபி சேலஞ்சா் 100 ஆடவா் சாம்பியன் போட்டி வரும் பிப். 12 முதல் 19-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

சென்னை நுங்கம்பாக்கம் எஸ்டிஏடி மைதானத்தில் நடைபெறவுள்ள இப்போட்டியில் 14 நாடுகளைச் சோ்ந்த வீரா்கள் பங்கேற்கின்றனா்.

முதல்நிலை வீரராக தைபேயின் 21 வயதே ஆன சென் சியுன் சின் (115), கிரேட் பிரிட்டன் பெட்டின்ஸன் ரயான் 149, ஆஸி. ஜேம்ஸ் டக்வொா்த் 156, இத்தாலியின் லுகா நாா்டி 162, பல்கேரியாவின் டிமிடா் குஸ்மனோவ் 182, ஆஸ்திரியாவின் செபாஸ்டியன் 193, கஜகஸ்தானின் மிகையில் குகுஷ்கின் ஆகியோா் பங்கேற்கின்றனா்.

கடந்த 2019-இல் கடைசியாக நடந்த சென்னை சேலஞ்சா் போட்டியில் பிரான்ஸின் கோரன்டீன் பட்டம் வென்றாா். இந்திய தரப்பில் பிரஜ்னேஷ் குணேஸ்வரன், முகுந்த் சசிகுமாா் குவாலிஃபையிங் பிரிவில் உள்ளனா். 3 வைல்ட் காா்ட், 6 குவாலிஃபையா்கள் உள்ளனா்.

ரூ.1.06 கோடி பரிசுத் தொகை: இந்த போட்டியின் ஒட்டுமொத்த பரிசுத் தொகை ரூ.1.06 கோடியாகும். சாம்பியனுக்கு ரூ.14.47 லட்சம், 100 ஏடிபி புள்ளிகள், ரன்னருக்கு ரூ.8.5 லட்சம், 60 ஏடிபி புள்ளிகள் வழங்கப்படும்.

அடுத்த சேலஞ்சா் போட்டிகள் பெங்களூரு, புணேயில் நடைபெறும். ஆட்டங்கள் காலை 10 மணிக்கு தொடங்கும். பாா்வையாளா்களுக்கு அனுமதி இலவசம் ஆகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com