முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

வெளிநாடுகளில் ரோஹித்தின் கேப்டன்சி வருத்தமளிக்கிறது: சுனில் கவாஸ்கர் 

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் கேப்டன்சி கேள்விக்குள்ளாகியுள்ளதென முன்னாள் கேப்டன் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார். 

News image

கோப்புப் படம் (ரோஹித், கவாஸ்கர்)

Updated On :11 ஜூலை 2023, 4:38 pm IST

இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் மோசமாக தோல்வியுற்றது. அஸ்வினை தேர்வு செய்யாதது, பௌலிங்கினை தேர்வு செய்தது, டிராவிஸ் ஹெட்டிற்கு பவுன்ஸர் பந்துகளை போடாதது என பல்வேறு விமர்சனங்களை பலரும் வைத்தனர். அதில் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கடுமையாகவே கூறியிருந்தார். 

இந்நிலையில் சமீபத்தில் கவாஸ்கர் கூறியதாவது: 

ரோஹித்திடம் அதிகம் எதிர்பார்க்கிறேன். இந்தியாவில் வேறு. வெளிநாட்டில் எப்படி செயல்படுகிறார் என்பதே முக்கியம். அதுதான் உண்மையான் டெஸ்ட். அப்படி பார்க்கையில் அதிருப்திதான் உண்டாகியுள்ளது. டி20 கிரிக்கெட்டிலும் இந்தியா சரியாக விளையாடவில்லை. ஐபிஎல்லில் 100 போட்டிகளுக்கு கேப்டனாக இருந்தும் டி20 போட்டிகளில் இறுதி சுற்றுக்கு செல்லமுடியவில்லை. 

பயிற்சியாளர் திராவிட், ரோஹித் கலந்து பேச வேண்டும். டெஸ்ட் சாம்பியன்ஷிப் முடிந்தப் பிறகு ரோகித் சொல்கிறார் பயிற்சி செய்ய போதிய காலமில்லை என. இன்னும் எவ்வளவு நாள்கள் வேண்டுமென நினைக்கிறார். ஐபிஎல் போட்டிகளில் 20 ஓவர்கள் விளையாடுவது வேலைப் பளுவா? 

ஒரு பேட்டர் தொடர்ந்து ஒரே தவறினை செய்யும்போது மற்றவர்களுடன் கலந்தாலோசிக்க வேண்டும். லெக் ஸ்டம்பிற்கு பதிலாக ஆஃப் ஸ்டம்பில் கார்ட் எடுத்து விளையாடலாம் என்று ஆலோசனை வழங்கலாம். நான் இது போல சேவாக்கிற்கு கூறியுள்ளேன். அன்று பலரும் இதுபோல சந்தேகம் கேட்பார்கள். தவறினை திருத்திக் கொள்வார்கள். நானும் கேட்டிருக்கிறேன். ஆனால் இன்று ஒரு பேட்டர்கூட என்னிடம் கேட்பதில்லை. 

அணியிலும் நல்ல சூழ்நிலை நிலவவில்லை. வீரர்கள் தங்களுக்குள்ளாகவே நட்புணர்வுடன் இல்லாமல் இருக்கிறார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.