இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் மோசமாக தோல்வியுற்றது. அஸ்வினை தேர்வு செய்யாதது, பௌலிங்கினை தேர்வு செய்தது, டிராவிஸ் ஹெட்டிற்கு பவுன்ஸர் பந்துகளை போடாதது என பல்வேறு விமர்சனங்களை பலரும் வைத்தனர். அதில் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கடுமையாகவே கூறியிருந்தார்.
இந்நிலையில் சமீபத்தில் கவாஸ்கர் கூறியதாவது:
ரோஹித்திடம் அதிகம் எதிர்பார்க்கிறேன். இந்தியாவில் வேறு. வெளிநாட்டில் எப்படி செயல்படுகிறார் என்பதே முக்கியம். அதுதான் உண்மையான் டெஸ்ட். அப்படி பார்க்கையில் அதிருப்திதான் உண்டாகியுள்ளது. டி20 கிரிக்கெட்டிலும் இந்தியா சரியாக விளையாடவில்லை. ஐபிஎல்லில் 100 போட்டிகளுக்கு கேப்டனாக இருந்தும் டி20 போட்டிகளில் இறுதி சுற்றுக்கு செல்லமுடியவில்லை.
இதையும் படிக்க: போதைப் பொருள் போன்றவர் தீபக் சஹார்: வைரலாகும் தோனியின் பேச்சு!
பயிற்சியாளர் திராவிட், ரோஹித் கலந்து பேச வேண்டும். டெஸ்ட் சாம்பியன்ஷிப் முடிந்தப் பிறகு ரோகித் சொல்கிறார் பயிற்சி செய்ய போதிய காலமில்லை என. இன்னும் எவ்வளவு நாள்கள் வேண்டுமென நினைக்கிறார். ஐபிஎல் போட்டிகளில் 20 ஓவர்கள் விளையாடுவது வேலைப் பளுவா?
ஒரு பேட்டர் தொடர்ந்து ஒரே தவறினை செய்யும்போது மற்றவர்களுடன் கலந்தாலோசிக்க வேண்டும். லெக் ஸ்டம்பிற்கு பதிலாக ஆஃப் ஸ்டம்பில் கார்ட் எடுத்து விளையாடலாம் என்று ஆலோசனை வழங்கலாம். நான் இது போல சேவாக்கிற்கு கூறியுள்ளேன். அன்று பலரும் இதுபோல சந்தேகம் கேட்பார்கள். தவறினை திருத்திக் கொள்வார்கள். நானும் கேட்டிருக்கிறேன். ஆனால் இன்று ஒரு பேட்டர்கூட என்னிடம் கேட்பதில்லை.
அணியிலும் நல்ல சூழ்நிலை நிலவவில்லை. வீரர்கள் தங்களுக்குள்ளாகவே நட்புணர்வுடன் இல்லாமல் இருக்கிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சர்தார் - 2 வெளியீட்டுத் தேதி!

மூன்று முடிச்சு தொடரில் இணைந்த நடிகை சஹானா!

மேற்கு வங்கம்: குண்டுவெடிப்பு வழக்கில் முக்கியக் குற்றவாளிகள் கைது!

முதல்வர் விஜய்க்கு நன்றி சொன்ன ஸோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு! ஏன்?
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47



