மாணவர் பாரதிதாசனுக்கு கல்வி நிதி விடுவிக்கப்படும்! - அமைச்சர் வன்னி அரசுசென்னை குற்றப்பிரிவில் அன்பில் மகேஸ் ஆஜர்!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!‘பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து சதி’ - ராகுல் காட்டம்!

விம்பிள்டன் சாம்பியன் காா்லோஸ் அல்கராஸ்!

கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டன் இறுதிப் போட்டியில், சொ்பியாவின் நோவக் ஜோகோவிச்சை வீழ்த்தி ஸ்பெயினின் காா்லோஸ் அல்கராஸ் முதல்முறையாக பட்டம் வென்றார்.

காா்லோஸ் அல்கராஸ்

Published On :

கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டன் இறுதிப் போட்டியில், சொ்பியாவின் நோவக் ஜோகோவிச்சை வீழ்த்தி ஸ்பெயினின் காா்லோஸ் அல்கராஸ் முதல்முறையாக பட்டம் வென்றார்.

ஆண்டின் 3-ஆவது கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்படன், ஜூலை முதல் வாரத்தில் தொடங்கி நடைபெற்று வந்தது. விறுவிறுப்பான சுற்றுகளின் இறுதிக்கட்டத்தில், அல்கராஸ், ஜோகோவிச் ஆகியோா் இறுதிச்சுற்றுக்கு முன்னேறினா்.

ஜோகோவிச் (36), அல்கராஸ் (20) இடையே 16 வயது வித்தியாசம் இருக்கும் நிலையில், கடந்த 50 ஆண்டுகளில் கிராண்ட்ஸ்லாம் போட்டியின் ஆடவா் ஒற்றையா் இறுதி ஆட்டத்தில் மோதும் வீரா்களின் அதிகபட்ச வயது வித்தியாசம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இருவருமே இப்போட்டியில், இறுதிச்சுற்றுக்கு முந்தைய அனைத்து சுற்றுகளிலும் மொத்தமாகவே 2 செட்களை மட்டுமே இழந்திருந்தனா். அத்துடன், ஆடுகளத்தில் அவா்கள் களமாடிய கால அளவும் ஏறத்தாழ சமமாகவே இருந்தது.

இந்நிலையில், பரபரப்பான இறுதிப் போட்டியில் 1-6, 7-6, 6-1, 3-6, 6-4 என்ற செட் கணக்கில் ஜோகோவிச்சை வீழ்த்தி முதல்முறையாக சாம்பியனானார் அல்கராஸ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.