மே.இ.தீவுகளுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி எனது அறிமுகப் போட்டியை ஞாபகப்படுத்தியது: ரோஹித் சர்மா

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி தனது அறிமுகப் போட்டியை ஞாபகப்படுத்தியதாக இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
மே.இ.தீவுகளுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி எனது அறிமுகப் போட்டியை ஞாபகப்படுத்தியது: ரோஹித் சர்மா

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி தனது அறிமுகப் போட்டியை ஞாபகப்படுத்தியதாக இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியின் வெற்றிக்குப் பின்னர் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.

இது குறித்து அவர் பேசியதாவது: நான் இந்திய அணியில் அறிமுகமானபோது 7-வது வீரராக களமிறங்கினேன். மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் மீண்டும் அதே இடத்தில் களமிறங்கியது எனது அறிமுகப் போட்டியை ஞாபகப்படுத்தியது. இந்திய அணியில் புதிதாக விளையாடுபவர்களுக்கு அவர்களது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த நேரம் கொடுக்க நாங்கள் விரும்பினோம் என்றார்.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com