16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு! கிளாம்பாக்கத்திலிருந்து இன்று மாலை முதல் கூடுதல் மாநகரப் பேருந்துகள்!செய்யறிவே எதிர்காலம்; வளர்ச்சியை மட்டுப்படுத்த முடியாது! டிரம்ப் திட்டவட்டம்!மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்பு

சிஎஸ்கே வீரர் ருதுராஜ் திருமணம்: யார் இந்த உட்கர்ஷா பவார்? 

பிரபல சிஎஸ்கே வீரர் ருத்ராஜிக்கு நடைபெற்ற திருமணம் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது. 

Published On :

சிஎஸ்கே வீரர் ருதுராஜ் ஐபிஎல்லில் 2021இல் 635 ரன்களும், 2022இல் 368 ரன்களும், 2023இல் 590 ரன்களும் எடுத்துள்ளார். சிஎஸ்கே அணிக்கு அடுத்த கேப்டனாகும் வாய்ப்பு அதிகமுள்ளதாக ரசிகர்கள் கருதுகின்றனர். தற்போது தனது காதலியான உட்கர்ஷா பவாரை திருமணம் முடித்தார். 

Story image

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு மாற்று வீரராக தேர்வு செய்யப்பட்டார். திருமணம் இருப்பதால் ஜெய்ஸ்வால் தேர்வானார். ஆனால் இன்னும் சில நாள்களில் ருதுராஜ் இங்கிலாந்து செல்வார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Story image


ருதுராஜ் காதலியும் மனைவியுமான உட்கர்ஷா பவார்: 

11 வயதில் இருந்து கிரிக்கெட் விளையாடும் உட்கர்ஷா மகாராஷ்டிரம் அணிக்காக பல ஆண்டுகள் விளையாடியுள்ளார். மகளிர் ஐபிஎல்லில் ஏலத்தில் யாரும் எடுக்கவில்லை. ஆனால் நல்ல ஆல்ரவுண்டர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Story image

தற்போது புணேவில் உடல்நலம் ஊட்டசத்து குறித்த பிட்னஸ் பாடப்பிரிவில் படித்து வருகிறார். சிஎஸ்கே இறுதிப் ப முடிந்தப் பிறகு முக்கியமான நபர்கள் என ருதுராஜ் தோனியுடன் உட்க்ர்ஷா புகைப்படத்தினையும் பகிர்ந்திருந்தார். அப்போதுதான் உட்கர்ஷா வைரலானார். 

Story image

இந்நிலையில் ஜூன் 3இல் அவர்களுக்கு திருமணம் நடைபெற்றது. பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ருதுராஜ் திருமணப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.