திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: முதல்வர் விஜய் வாழ்த்துதிருச்சி மாவட்ட ஆட்சியர் இருக்கையில் அமர்ந்து ரீல்ஸ்! வைரலாகும் விடியோஇன்று ஜூன்20 தங்கம் வாங்கலாமா? நேற்று குறைந்த விலை இன்று என்னவானது? அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்திநீட் மறுதேர்வே துயரம், அதில் இதுவுமா? நாக்பூர் மாணவருக்கு அபுதாபியில் தேர்வு மையம்குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்து
/

தோனியால் வைரலான கேண்டி கிரஷ்: 3 மணிநேரத்தில் 36 லட்சம் பேர் பதிவிறக்கம்!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு கேண்டி கிரஷ் நிறுவனம் நன்றி தெரிவித்துள்ளது.

News image
Updated On :26 ஜூன் 2023, 1:29 pm IST

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு கேண்டி கிரஷ் நிறுவனம் நன்றி தெரிவித்துள்ளது.

இண்டிகோ விமானத்தில் தோனி அவரது மனைவியுடன் பயணம் செய்யும் விடியோ ஒன்று ஞாயிற்றுக்கிழமை வைரலானது. விமானத்தில் டேப்புடன் அமர்ந்திருந்த தோனியின் அருகில் சென்ற விமானப் பணிப்பெண் அவருக்கு சாக்லெட்டை பரிசாக வழங்கினார்.

அதனை மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்ட தோனி, அந்த பணிப்பெண்ணுடன் சிறிது விநாடிகள் உரையாடினார்.

இந்த காணொலி சமூக ஊடகங்களில் ஞாயிற்றுக்கிழமை வைரலாகத் தொடங்கியது.

இந்நிலையில், தோனி வைத்திருந்த டேப்பிள், அவர் கேண்டி கிரஷ் விளையாடிக் கொண்டிருந்தார். இந்த புகைப்படத்தை பகிர்ந்த ரசிகர்கள் கேண்டி கிரஷ் விளையாட்டையும் வைரலாக்கினர்.

Story image

இதன் விளைவாக அடுத்த 3 மணிநேரத்தில் 36 லட்சம் பேர் புதிதாக கேண்டி கிரஷ் விளையாட்டை பதிவிறக்கம் செய்துள்ளனர்.

இந்த தகவலை டிவிட்டரில் பகிர்ந்துள்ள கேண்டி கிரஷ் நிறுவனம், “உங்களால்தான் நாங்கள் டிரெண்டாகியுள்ளோம். நன்றி.” எனத் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.