இந்திய அணியின் இளம் வீரர்களில் ஒருவரான ரிஷப் பந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், அவர் கார் விபத்தில் சிக்கிய உயிர்பிழைத்த நாளான ஜனவரி 1, 2023 தினத்தை தனது இரண்டாவது பிறந்தநாளாகப் பதிவிட்டுள்ளார்.
இந்திய அணியின் இளம் நட்சத்திர வீரர்களில் ஒருவரான ரிஷப் பந்த் கடந்த ஆண்டு தனது இல்லத்துக்கு காரில் சென்று கொண்டிருக்கும்போது எதிர்பாராத விதமாக அவரது கார் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் காயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதனையடுத்து, அவர் இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி உள்பட பல போட்டிகளில் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.
ரிஷப் பந்த்தின் உடல்நிலை முன்னேற்றம் அடைந்து வரும் நிலையில், இன்ஸ்டாகிராமில் அவர் தனக்கு விபத்து ஏற்பட்டு உயிர்பிழைத்த நாளை தனது இரண்டாவது பிறந்த நாள் எனப் பதிவிட்டுள்ளது அவரது ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அமெரிக்க படைகள் வாபஸ்! ஹோர்முஸை கடந்த 1.25 கோடி பீப்பாய் எண்ணெய் கப்பல்கள்!

நிதி நிலைமையை தவெக அரசு திறம் பட கையாளும்: பிரவீண் சக்கரவா்த்தி

நீட் மறுதேர்வு திட்டமிட்டபடி நடைபெறும்! என்டிஏ விளக்கம்

100 % கடன் தள்ளுபடி கோரி ஜூன் 30-இல் உண்ணாவிரதம்: பி.ஆா்.பாண்டியன்
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK



