ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் கலப்பு இரட்டையர் போட்டியில் தீபிகா பல்லிகல்-ஹரிந்தர் பால்சிங் இணை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.
ஆசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் கலப்பு இரட்டையர் பிரிவில் இறுதிப் போட்டி இன்று நடைபெற்றது. அதில், தரநிலையில் 2ஆம் இடத்தில் உள்ள மலேசியாவைச் சேர்ந்த அர்னால்ட-இவான் யூயன் இணையை, தீபிகா பல்லிகல், ஹரிந்தர் பால்சிங் இணை எதிர்க்கொண்டது.
இந்த ஆட்டத்தில் அர்னால்ட-இவான் யூயன் இணையை 11-10, 11-8 என்ற கணக்கில் வீழ்த்தி இந்திய இணை அபார வெற்றி பெற்றது. சாம்பியன் பட்டம் வென்ற தீபிகா பல்லிகல், ஹரிந்தர் பால்சிங் இருவரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.