ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்: தீபிகா-ஹரிந்தர் இணை வெற்றி

ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் கலப்பு இரட்டையர் போட்டியில் தீபிகா பல்லிகல்-ஹரிந்தர் பால்சிங் இணை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.  
கோப்புப் படம்.
கோப்புப் படம்.

ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் கலப்பு இரட்டையர் போட்டியில் தீபிகா பல்லிகல்-ஹரிந்தர் பால்சிங் இணை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. 

ஆசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் கலப்பு இரட்டையர் பிரிவில் இறுதிப் போட்டி இன்று நடைபெற்றது. அதில், தரநிலையில் 2ஆம் இடத்தில் உள்ள மலேசியாவைச் சேர்ந்த அர்னால்ட-இவான் யூயன் இணையை, தீபிகா பல்லிகல், ஹரிந்தர் பால்சிங் இணை எதிர்க்கொண்டது. 

இந்த ஆட்டத்தில் அர்னால்ட-இவான் யூயன் இணையை 11-10, 11-8 என்ற கணக்கில் வீழ்த்தி இந்திய இணை அபார வெற்றி பெற்றது. சாம்பியன் பட்டம் வென்ற தீபிகா பல்லிகல், ஹரிந்தர் பால்சிங் இருவரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com