வரலாற்றை மாற்றிய சென்னை, மும்பை அணிகள்!

ஐபிஎல் பிளே ஆஃப் சுற்றில் குஜராத், லக்னெள அணிகளை வென்று சென்னை, மும்பை அணிகள் வரலாற்றை மாற்றியுள்ளனர்.
வரலாற்றை மாற்றிய சென்னை, மும்பை அணிகள்!

ஐபிஎல் பிளே ஆஃப் சுற்றில் குஜராத், லக்னெள அணிகளை வென்று சென்னை, மும்பை அணிகள் வரலாற்றை மாற்றியுள்ளனர்.

ஐபிஎல் தொடரின் கடைசி சீசனில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னெள சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகள் புதிதாக அறிமுகமானது. குஜராத் அணி கலந்து கொண்ட முதல் சீசனிலேயே கோப்பையை கைப்பற்றி வரலாறு படைத்தது.

இந்நிலையில், 4 முறை ஐபிஎல் சாம்பியனான சென்னை அணியை கடந்த சீசனில் இரண்டு முறையும், நடப்பு சீசனில் ஒரு லீக் போட்டியிலும் எதிர்கொண்ட குஜராத் அணி 3 முறையும் வெற்றி பெற்றது.

அதேபோல், 5 முறை சாம்பியனான மும்பை அணியை இதுவரை 3 லீக் போட்டிகளில் எதிர்கொண்ட லக்னெள அணி 3 முறையும் வெற்றி பெற்றிருந்தது.

குஜராத்தை சென்னையும், லக்னெளவை மும்பையும் ஐபிஎல் வரலாற்றில் வென்றதில்லை என்ற சூழல் நிலவியது.

இந்நிலையில், இந்த சீசனில் குஜராத், சென்னை, லக்னெள, மும்பை அணிகள் முறையே முதல் 4 இடங்களை பிடித்து பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறின.

பிளே ஆஃப்பின் முதல் குவாலிஃபையர் போட்டியில் குஜராத்தை சென்னை அணியும், எலிமினேட்டர் போட்டியில் லக்னெளவை மும்பை அணியும் வென்று வரலாற்றை மாற்றியுள்ளனர்.

அதுமட்டுமின்றி, குஜராத் அணியை கடந்த 2 சீசன்களில் எந்த அணியும் ஆல்-அவுட் செய்ததில்லை என்ற நிலையில், குவாலிஃபையர் போட்டியில் அனைத்து விக்கெட்டுகளையும் வீழ்த்தியது சென்னை அணி.

சென்னை அணி நேரடியாக இறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ள நிலையில், குஜராத் - மும்பை அணிகள் மோதும் குவாலிஃபையர் இரண்டாம் சுற்றில் வெற்றிபெறும் அணி சென்னை அணியுடன் ஞாயிற்றுக்கிழமை இறுதிப் போட்டியில் மோதவுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com