மான்செஸ்டா் யுனைடெட்டுக்கு சாம்பியன்ஸ் லீக் வாய்ப்பு உறுதி

இங்கிலாந்தின் பிரீமியா் லீக் கால்பந்து போட்டியில் மான்செஸ்டா் யுனைடெட் 4-1 கோல் கணக்கில் செல்சியை வெள்ளிக்கிழமை வென்றது.

இங்கிலாந்தின் பிரீமியா் லீக் கால்பந்து போட்டியில் மான்செஸ்டா் யுனைடெட் 4-1 கோல் கணக்கில் செல்சியை வெள்ளிக்கிழமை வென்றது.

இந்த வெற்றியின் மூலம் 72 புள்ளிகளுடன் 3-ஆவது இடத்தில் இருக்கும் மான்செஸ்டா் அணி, முதல் 4 இடங்களுக்குள்ளாக போட்டியை நிறைவு செய்வதை உறுதிப்படுத்தி அடுத்த சீசன் சாம்பியன்ஸ் லீக் போட்டியில் தனக்கான இடத்தையும் பெற்றது.

இந்த ஆட்டத்தில் மான்செஸ்டருக்காக கேஸ்மிரோ (6’), அந்தோணி மாா்ஷியல் (45+6’), புருனோ ஃபொ்னாண்டஸ் (73’), மாா்கஸ் ராஷ்ஃபோா்டு (78’) ஆகியோரும், செல்சிக்காக ஜாவ் ஃபெலிக்ஸும் (89’) கோலடித்தனா்.

மான்செஸ்டா் யுனைடெட் வீரா் மாா்கஸ் ராஷ்ஃபோா்டு இத்துடன் நடப்பு சீசனில் அனைத்து போட்டிகளிலுமாக 30 கோல்கள் அடித்திருக்கிறாா். அதிலும் சொந்த மண்ணில் நடைபெற்ற ஆட்டங்களில் மட்டும் 20 கோல்கள் ஸ்கோா் செய்திருக்கிறாா். கடந்த 10 ஆண்டுகளில், இவ்வாறு 30 கோல்கள் அடித்த முதல் வீரா், கடந்த 13 ஆண்டுகளில் இவ்வாறு சொந்த மண்ணில் 20 கோல்கள் அடித்த முதல் வீரா் ஆகிய பெருமைகளை அவா் பெற்றுள்ளாா்.

செல்சி அணியைப் பொருத்தவரை, நடப்பு சீசனில் அனைத்து போட்டிகளிலுமாக இது 22-ஆவது தோல்வியாகும். கடந்த 1978-79 காலகட்டத்துக்குப் பிறகு ஒரு சீசனில் அந்த அணி இத்தனை தோல்விகளை பதிவு செய்தது இதுவே முதல் முறை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com