உலகக் கோப்பையில் முதல் முறையாக நியூசிலாந்து அணி 400 ரன்களைக் கடந்துள்ளது.
உலகக் கோப்பையில் பெங்களூரு சின்னசுவாமி மைதானத்தில் இன்று நடைபெற்று வரும் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து 6 விக்கெட்டுகளை இழந்து 401 ரன்களைக் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக இளம் வீரர் ரச்சின் ரவீந்திரா 108 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து கேப்டன் கேன் வில்லியம்சன் அதிகபட்சமாக 95 ரன்கள் எடுத்தார்.
பாகிஸ்தானுக்கு எதிரான இன்றையப் போட்டியில் 400 ரன்களைக் கடந்ததன் மூலம் உலகக் கோப்பையில் முதல் முறையாக நியூசிலாந்து அணி 400 ரன்களைக் கடந்துள்ளது.
உலகக் கோப்பையில் 400 ரன்களைக் கடந்த அணிகள்
தென்னாப்பிரிக்கா - 3 முறை
இந்தியா - 1 முறை
ஆஸ்திரேலியா - 1 முறை
நியூசிலாந்து - 1 முறை