பிஃபா 2026! நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேற்றம்... பொது விடுமுறை அறிவித்த ஈக்வடார் அதிபர்!! முதல் டி20: இந்தியாவை முதல் முறையாக வீழ்த்தி வரலாறு படைத்த அயர்லாந்து! அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலர்கள் நியமனம் தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட நாராயணா நியமனம்!ஆபரேஷன் சிந்தூரில் 6 வீரர் வீரமரணம்! ஓராண்டு கழித்து பெயர்களை வெளிட்ட மத்திய அரசு!ஜூலை இறுதியில் தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்? திருச்சி கிழக்கில் போட்டியா? மு.க. ஸ்டாலின் பதில்! சென்னை உள்பட 6 மாவட்டங்களில் நாளை கனமழை!
/

விராட் கோலி மிகச் சிறந்த வீரர்; பிறந்த நாளில் புகழாரம் சூட்டிய ராகுல் டிராவிட்!

விராட் கோலி ஒரு மிகச் சிறந்த வீரர் எனவும், அவரது தலைமுறை வீரர்களுக்கு அவர் வழிகாட்டியாக இருப்பதாகவும் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :5 நவம்பர் 2023, 3:05 pm IST

விராட் கோலி ஒரு மிகச் சிறந்த வீரர் எனவும், அவரது தலைமுறை வீரர்களுக்கு அவர் வழிகாட்டியாக இருப்பதாகவும் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் ரன் மெஷின் என்று அழைக்கப்படும் விராட்  கோலி அவரது 35-வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். இந்த நிலையில், அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ள இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: விராட் கோலி ஒரு மிகச் சிறந்த வீரர்.  அனைத்து வடிவிலான போட்டிகளிலும் விராட் கோலி மிகச் சிறப்பாக விளையாடக் கூடியவர். அதிலும் குறிப்பாக ஒருநாள் போட்டிகளில் அவர் மிகச் சிறப்பாக விளையாடக் கூடியவர். ஒருநாள் போட்டிகளில் அவர் ஆட்டத்தை எடுத்துச் செல்லும் விதம் மற்றும் ஆட்டத்தினை முடிக்கும் விதம் தனித்துவமானது. அவரது சாதனைகள் அவர் தலைமுறை வீரர்களுக்கு சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த உந்துசக்தியாக இருக்கும் என்றார். 

Story image

சர்வதேச கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரரான விராட் கோலி நடப்பு உலகக் கோப்பையிலும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.