ஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

‘உங்கள் அன்பில் திணறுகிறேன்’: மேக்ஸ்வெல்

ஆப்கனுக்கு எதிரான போட்டியில் மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய மேக்ஸ்வெல் ரசிகர்களின் அன்புக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

News image
Updated On :8 நவம்பர் 2023, 7:19 am

DIN

உலகக் கோப்பை கிரிக்கெட்டின் 39-ஆவது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை நேற்று (செவ்வாய்க்கிழமை) வென்றது. இதன் மூலம், அரையிறுதிக்கும் தகுதிபெற்றது. 

இந்த ஆட்டத்தில் 91 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றமான நிலையில் இருந்த ஆஸ்திரேலியாவை, கிளென் மேக்ஸ்வெல் தனது அதிரடி இரட்டைச் சதத்தால் வெற்றிப் பாதைக்குத் திருப்பினார்.  நடப்பு உலகக் கோப்பை போட்டியில் இரட்டைச் சதம் விளாசிய முதல் வீரர் ஆனார் மேக்ஸ்வெல். ஆட்டத்தின்போது வலது காலில் தசைப்பிடிப்பால் பாதிக்கப்பட்டார். ஆனாலும், வலியுடன் போராடி விக்கெட்டையும் இழக்காமல் நிலைத்து நின்றார்.

வலியால் அவதிப்பட்ட மேக்ஸ்வெல்!

வலியால் அவதிப்பட்ட மேக்ஸ்வெல்!

ஒரு கட்டத்தில் விக்கெட்டுகளிடையே ஓடி ரன்கள் எடுக்க முடியாத நிலைக்கு சென்ற மேக்ஸ்வெல், ஸ்டிரைக்கிங் எண்டில் இருந்தபடி பவுண்டரி, சிக்ஸர்களாக விளாசத் தொடங்கி வெற்றி தேடித் தந்தார். முக்கியமாக, ஆஸி. வெல்ல வாய்ப்பே இல்லாத நிலையிலிருந்து யாரும் எதிர்பார்க்காத வெற்றியை தனி ஒரு வீரராக பெற்றுத்தந்தார். இந்த ஆட்டத்தைக் கண்ட ரசிகர்கள், போட்டி முடிந்ததும் மேக்ஸ்வெல்லை பாராட்டினர். சச்சின் டெண்டுல்கர், ‘என் வாழ்வில் நான் பார்த்த சிறந்த ஒருநாள் போட்டி இதுதான்’ எனக் கூறியுள்ளார். 

இதுபோல் பல பிரபல கிரிக்கெட் வீரர்களும் ரசிகர்களும் மேக்ஸ்வெல்லின் ஆட்டத்தைப் புகழ்ந்து வருகின்றனர். 

இந்நிலையில், மேக்ஸ்வெல் தன் எக்ஸ் தளத்தில், “உங்கள் அன்பினால் நிரம்பி வழிகிறேன். வாழ்த்துக்களை அனுப்பிய அனைவருக்கும் என் நன்றி. பேட் கம்மின்ஸ் அங்கு (மைதானத்தில்) இருந்தது அற்புதம். இனி தந்தைக்கான கடமைகளுக்கு திரும்பும் நேரம்” எனப் பதிவிட்டுள்ளார்.

கிரிக்கெட் ரசிகர்களின் வாழ்வில் மறக்கவே முடியாத ஆட்டத்தை வழங்கிய மேக்ஸ்வெல், தன்னுடைய திறமைக்கான அங்கீகாரமாக உலகளவில் வாழ்த்து மழையில் நனைந்து வருகிறார்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.