அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டு
/

கேப்டனாக முதல் வெற்றி; சூர்யகுமார் யாதவ் பேசியது என்ன?

இந்திய அணியை கேப்டனாக வழிநடத்திய முதல் போட்டியிலேயே அணிக்கு வெற்றி கிடைத்துள்ளது பெருமையாக இருப்பதாக சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :24 நவம்பர் 2023, 10:49 am

DIN

இந்திய அணியை கேப்டனாக வழிநடத்திய முதல் போட்டியிலேயே அணிக்கு வெற்றி கிடைத்துள்ளது பெருமையாக இருப்பதாக சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.

உலகக் கோப்பைத் தொடர் முடிவடைந்த சில நாட்களிலேயே இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் தொடங்கியுள்ளது.  5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி நேற்று (நவம்பர் 23) விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில்  இந்திய அணி கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்றது.

இந்திய அணியில் அதிகபட்சமாக கேப்டன் சூர்யகுமார் யாதவ் 42 பந்துகளில் 80 ரன்கள் எடுத்தார். அதில் 9  பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும். இந்திய அணியின் கேப்டனாக முதல் போட்டியிலேயே அணிக்கு வெற்றிப் பெற்றுத் தந்துள்ளார் சூர்யகுமார் யாதவ்.

இந்த நிலையில், இந்திய அணியை கேப்டனாக வழிநடத்திய முதல் போட்டியிலேயே அணிக்கு வெற்றி கிடைத்துள்ளது பெருமையாக இருப்பதாக சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்திய அணியின் கேப்டனாக பொறுப்பேற்ற முதல் போட்டியிலேயே அணிக்கு வெற்றி பெற்றுத் தந்துள்ளது பெருமையளிக்கிறது. இஷான் கிஷன் சிறப்பாக விளையாடினார். அவருடன் அமைத்த பார்ட்னர்ஷிப் நான் அதிரடியாக விளையாடுவதற்கு உதவியது. பயமின்றி போட்டியை வென்று கொடுக்க வேண்டும் என்பது எனக்கு மிகவும் முக்கியமானதாக இருந்தது. அதனால் எந்த ஒரு அச்சமுமின்றி விளையாடினேன். இறுதிக்கட்டத்தில் ரிங்கு சிங் அதிரடியாக விளையாடி அணியை வெற்றி  பெறச் செய்தார். அழுத்தமான சூழலில்  சிறப்பாக விளையாடிய அவர் 14  பந்துகளில் 22 ரன்கள் எடுத்தார். பதற்றமின்றி அவர் பேட்டிங் செய்த விதம் சிறப்பாக இருந்தது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.