இந்தியா - இலங்கை டெஸ்ட் தொடர்: ரசிகர்கள் இலவசமாக கண்டு ரசிக்கலாம்! செஸ் சாம்பியன் பிரக்ஞானந்தாவுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து!இந்தியாவுக்கு 67% எல்பிஜி தேவையைப் பூர்த்தி செய்யும் அமெரிக்கா!டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 2 காசுகள் உயர்ந்து ரூ. 95.20 ஆக நிறைவு!பங்குச் சந்தை சரிவு: சென்செக்ஸ் 450 புள்ளிகளுக்கும், நிஃப்டி 24,550க்கு அருகில் சென்று நிறைவு!!பாகிஸ்தான், சௌதியுடன் கைகோர்க்கும் துருக்கி! முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம்! ஐரோப்பா டி20 பிரீமியர் லீக்கில் விளையாடும் அஜிங்க்யா ரஹானே! செயின்ட் லூயிஸ் ரேப்பிட்- பிளிட்ஸ் செஸ்: பிரக்ஞானந்தா சாம்பியன்! ஒரே வாரத்தில் சவரனுக்கு ரூ. 5,400 உயர்வு: தங்கம் விலை மாலை நிலவரம்!
/

கேப்டனாக முதல் வெற்றி; சூர்யகுமார் யாதவ் பேசியது என்ன?

இந்திய அணியை கேப்டனாக வழிநடத்திய முதல் போட்டியிலேயே அணிக்கு வெற்றி கிடைத்துள்ளது பெருமையாக இருப்பதாக சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :2 பிப்ரவரி 2024, 8:55 am IST

இந்திய அணியை கேப்டனாக வழிநடத்திய முதல் போட்டியிலேயே அணிக்கு வெற்றி கிடைத்துள்ளது பெருமையாக இருப்பதாக சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.

உலகக் கோப்பைத் தொடர் முடிவடைந்த சில நாட்களிலேயே இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் தொடங்கியுள்ளது.  5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி நேற்று (நவம்பர் 23) விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில்  இந்திய அணி கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்றது.

இந்திய அணியில் அதிகபட்சமாக கேப்டன் சூர்யகுமார் யாதவ் 42 பந்துகளில் 80 ரன்கள் எடுத்தார். அதில் 9  பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும். இந்திய அணியின் கேப்டனாக முதல் போட்டியிலேயே அணிக்கு வெற்றிப் பெற்றுத் தந்துள்ளார் சூர்யகுமார் யாதவ்.

இந்த நிலையில், இந்திய அணியை கேப்டனாக வழிநடத்திய முதல் போட்டியிலேயே அணிக்கு வெற்றி கிடைத்துள்ளது பெருமையாக இருப்பதாக சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்திய அணியின் கேப்டனாக பொறுப்பேற்ற முதல் போட்டியிலேயே அணிக்கு வெற்றி பெற்றுத் தந்துள்ளது பெருமையளிக்கிறது. இஷான் கிஷன் சிறப்பாக விளையாடினார். அவருடன் அமைத்த பார்ட்னர்ஷிப் நான் அதிரடியாக விளையாடுவதற்கு உதவியது. பயமின்றி போட்டியை வென்று கொடுக்க வேண்டும் என்பது எனக்கு மிகவும் முக்கியமானதாக இருந்தது. அதனால் எந்த ஒரு அச்சமுமின்றி விளையாடினேன். இறுதிக்கட்டத்தில் ரிங்கு சிங் அதிரடியாக விளையாடி அணியை வெற்றி  பெறச் செய்தார். அழுத்தமான சூழலில்  சிறப்பாக விளையாடிய அவர் 14  பந்துகளில் 22 ரன்கள் எடுத்தார். பதற்றமின்றி அவர் பேட்டிங் செய்த விதம் சிறப்பாக இருந்தது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.