தனது அனைத்து ஷாட்களையும் விளையாடவும், அச்சமின்றி பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ளவும் முயற்சிப்பதாக இந்திய அணியின் இளம் வீரர்களில் ஒருவரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி நேற்று (நவம்பர் 26) திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியாவை 44 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்தது. நேற்றையப் போட்டியில் இந்திய வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இந்திய அணிக்கு அதிரடியான தொடக்கத்தைத் தந்தார். அதிரடியாக விளையாடிய அவர் 25 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரது அதிரடியான ஆட்டம் அடுத்தடுத்து களமிறங்கிய பேட்ஸ்மேன்கள் அழுத்தமின்றி விளையாட உதவியது.
இந்த நிலையில், தனது அனைத்து ஷாட்களையும் விளையாடவும், அச்சமின்றி பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ளவும் முயற்சிப்பதாக இந்திய அணியின் இளம் வீரர்களில் ஒருவரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக போட்டி முடிவடைந்த பிறகு அவர் பேசியதாவது: இது எனக்கு மிகவும் சிறப்பான தருணம். நான் என்னுடைய அனைத்து விதமான ஷாட்களையும் விளையாட முயற்சி செய்தேன். பந்துவீச்சாளர்களை அச்சமின்றி எதிர்கொண்டு ஷாட்களை விளையாடினேன். நான் எந்த மாதிரியான ஷாட்களைத் தேர்ந்தெடுக்கப் போகிறேன் என்பதில் உறுதியாக இருந்தேன். கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் பயிற்சியாளர் விவிஎஸ் லக்ஸ்மன் என்னை சுதந்திரமாக விளையாடக் கூறினார்கள். அணியில் அனுபவமிக்க வீரர்கள் இருக்கும்போது நான் எப்போதும் எனது திறமைகளை வளர்த்துக் கொள்வது என்பது குறித்தே சிந்திப்பேன். நான் நாள்தோறும் கற்றுக் கொண்டிருக்கிறேன். உடலுறுதியிலும், மன உறுதியிலும் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறேன். ஒவ்வொரு நாளும் எனது திறமைகளை வளர்த்துக் கொள்கிறேன் என்றார்.
இதையும் படிக்க: ஐபிஎல்: மும்பை அணிக்கு திரும்பினார் ஹாா்திக் பாண்டியா
இந்திய அணிக்காக யஷஸ்வி ஜெய்ஸ்வால் இதுவரை 2 டெஸ்ட் மற்றும் 10 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!

தேசிய கீதம் குறித்து நான்தான் தீர்மானிப்பேன்: ஜே.சி.டி. பிரபாகர்!

நீட்: தற்கொலை செய்துகொண்ட மாணவர்களின் குடும்பத்துக்கு ரூ. 1 கோடி இழப்பீடு வழங்க பிரதமருக்கு சிஜேபி கடிதம்!

தொடர்ச்சியாக 2-ஆவது வெற்றி..! ஸ்காட்லாந்தை வீழ்த்தியது மேற்கிந்தியத் தீவுகள்!
விடியோக்கள்

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK



