தமிழக உள்துறை செயலர் மாற்றம்! மணிவாசன் நியமனம்நாளை (ஏப். 12) தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி?ஏப்.6 சென்னையில் மழை பெய்ததால் விமானத்தில் சிக்கிய 2 கிலோ தங்கம்! சுவாரசியம்10ஆம் வகுப்பு தேர்ச்சி விதியை கடுமையாக்கும் சிபிஎஸ்இ! எவ்வளவு எடுத்தால் பாஸ்?பேரவைத் தேர்தலில் போட்டியிடும் சந்தன கடத்தல் வீரப்பன் மனைவி, மகள்!ராகுல் காந்தியுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி!ஜோதிபா புலேவின் 200-வது பிறந்த நாள்: குடியரசுத்தலைவர், பிரதமர் மரியாதை!ரஜினி, தனுஷ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்! தவெக தலைவர் விஜய்யின் கடலூர் பிரசாரம் ரத்து!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 200 குறைந்தது!எத்தனை பேர் வந்தாலும் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது: முதல்வர் மு.க. ஸ்டாலின்
/

எப்போதும் எங்களுக்கு ஆதரவளிக்க சூர்யகுமார் இருக்கிறார்: பிரசித் கிருஷ்ணா

டி20 போட்டிகளில் பேட்டிங் செய்வது போன்றே இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் அணியை வழிநடத்துவதாக இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர்களில் ஒருவரான பிரசித் கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

News image
Updated On :27 நவம்பர் 2023, 12:39 pm

டி20 போட்டிகளில் பேட்டிங் செய்வது போன்றே இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் அணியை வழிநடத்துவதாக இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர்களில் ஒருவரான பிரசித் கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும்  ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி திருவனந்தபுரத்தில் நேற்று (நவம்பர் 26) நடைபெற்றது. இந்தப் போட்டியில்  இந்திய அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. இதன்மூலம், 5  போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில்  உள்ளது. நேற்றையப் போட்டியில் இந்திய அணியின் தரப்பில் வேகப் பந்துவீச்சாளர் பிரசித் கிருஷ்ணா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.  

இந்த நிலையில், டி20 போட்டிகளில் பேட்டிங் செய்வது போன்றே இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் அணியை வழிநடத்துவதாக இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர்களில் ஒருவரான பிரசித் கிருஷ்ணா தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் பேசியதாவது: பேட்டிங்கில்  எந்த ஒரு பதற்றமுமின்றி செயல்படுவதுபோல இந்திய அணியை வழிநடத்துவதிலும் பதற்றமின்றி சூர்யகுமார் யாதவ் செயல்படுகிறார். அவர் வீரர்கள் அனைவரின்  மீதும் நம்பிக்கை வைத்துள்ளார். வீரர்களுக்கு எல்லா விதத்திலும் அவர் ஆதரவளிக்கிறார். ஏதேனும் ஒரு விஷயம் தவறுதலாகப் போனால் அவர் எங்களுக்கு ஆதரவளிக்கத் தவறியதே இல்லை. இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா வீரர்களை சுதந்திரமாக விளையாடுமாறு கூறுவார். மும்பை இந்தியன்ஸ் அணியில் அவருடன் விளையாடும் சக வீரரான சூர்யகுமார் யாதவும் அவரைப் போன்றே வீரர்களை சுதந்திரமாக விளையாடுமாறு அறிவுறுத்துகிறார் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.