ராகுல், மில்லர் அதிரடி வீண்! ஒரு ரன் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி! இஸ்ரேல் தாக்குதல்களில் உருக்குலைந்த பெய்ரூட்.. பலி 250-ஐ கடந்தது!திமுக தோல்வி குறித்து புள்ளி விவரங்களுடன் விவாதிக்கத் தயார்: இபிஎஸ்ஈரானுக்கு வரி குறைப்பது குறித்து பேச்சுவார்த்தை : டிரம்ப்அதிமுக ஆட்சியில் கொளத்தூர் சிறப்பான தொகுதியாக மாறும்:எடப்பாடி பழனிசாமிஅமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: ரஷியா வரவேற்பு!நேபாளத்தில் மற்றொரு முன்னாள் பிரதமருக்கு எதிராக பிடி ஆணை!தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது! தலைமைச் செயலர் மாற்றத்துக்கு முதல்வர் கண்டனம்!ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!
/

எப்போதும் எங்களுக்கு ஆதரவளிக்க சூர்யகுமார் இருக்கிறார்: பிரசித் கிருஷ்ணா

டி20 போட்டிகளில் பேட்டிங் செய்வது போன்றே இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் அணியை வழிநடத்துவதாக இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர்களில் ஒருவரான பிரசித் கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

News image
Updated On :27 நவம்பர் 2023, 12:39 pm

டி20 போட்டிகளில் பேட்டிங் செய்வது போன்றே இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் அணியை வழிநடத்துவதாக இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர்களில் ஒருவரான பிரசித் கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும்  ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி திருவனந்தபுரத்தில் நேற்று (நவம்பர் 26) நடைபெற்றது. இந்தப் போட்டியில்  இந்திய அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. இதன்மூலம், 5  போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில்  உள்ளது. நேற்றையப் போட்டியில் இந்திய அணியின் தரப்பில் வேகப் பந்துவீச்சாளர் பிரசித் கிருஷ்ணா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.  

இந்த நிலையில், டி20 போட்டிகளில் பேட்டிங் செய்வது போன்றே இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் அணியை வழிநடத்துவதாக இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர்களில் ஒருவரான பிரசித் கிருஷ்ணா தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் பேசியதாவது: பேட்டிங்கில்  எந்த ஒரு பதற்றமுமின்றி செயல்படுவதுபோல இந்திய அணியை வழிநடத்துவதிலும் பதற்றமின்றி சூர்யகுமார் யாதவ் செயல்படுகிறார். அவர் வீரர்கள் அனைவரின்  மீதும் நம்பிக்கை வைத்துள்ளார். வீரர்களுக்கு எல்லா விதத்திலும் அவர் ஆதரவளிக்கிறார். ஏதேனும் ஒரு விஷயம் தவறுதலாகப் போனால் அவர் எங்களுக்கு ஆதரவளிக்கத் தவறியதே இல்லை. இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா வீரர்களை சுதந்திரமாக விளையாடுமாறு கூறுவார். மும்பை இந்தியன்ஸ் அணியில் அவருடன் விளையாடும் சக வீரரான சூர்யகுமார் யாதவும் அவரைப் போன்றே வீரர்களை சுதந்திரமாக விளையாடுமாறு அறிவுறுத்துகிறார் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.