காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் வென்று கொடுத்த மீராபாய் சானு!400க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள்! தொகுதி மறுவரையறைக்குப் பிறகு புதிய சட்டப்பேரவை! சுவேந்து அதிகாரி கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை
/

பாலஸ்தீனத்துக்கு ஆதரவளிக்கும் விதமாக செயல்பட்ட பாகிஸ்தான் வீரர்; கிரிக்கெட் வாரியம் என்ன செய்தது தெரியுமா?

பாலஸ்தீன கொடி ஒட்டப்பட்ட பேட்டில் பேட் செய்த பாகிஸ்தான் வீரர் அவரது சம்ளத்தில் 50 சதவிகித தொகையை அபராதமாக செலுத்த வேண்டும் என்ற முடிவை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் திரும்பப் பெற்றுள்ளது. 

News image
Updated On :28 நவம்பர் 2023, 3:54 pm IST

பாலஸ்தீன கொடி ஒட்டப்பட்ட பேட்டில் பேட் செய்த பாகிஸ்தான் வீரர் அவரது சம்ளத்தில் 50 சதவிகித தொகையை அபராதமாக செலுத்த வேண்டும் என்ற முடிவை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் திரும்பப் பெற்றுள்ளது. 

பாகிஸ்தானில் தேசிய டி20 சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்த தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் இரண்டு நாள்களுக்கு முன்னதாக நடைபெற்ற போட்டியில் கராச்சி ஒயிட்ஸ் மற்றும் லாகூர் ப்ளூஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் கராச்சி ஒயிட்ஸ் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆஸம் கான் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய விதிகளை மீறியதாகக் கூறி அவருக்கு போட்டியின் சம்பளத் தொகையில் 50 சதவிகிதத்தை அபராதமாக விதிக்கப்பட்டது. பேட்டிங்கின்போது பாலஸ்தீனக் கொடி ஒட்டியிருந்த பேட்டில் அவர் பேட் செய்ததாகவும், கொடியை அகற்றிவிட்டு விளையாடக் கூறி கள நடுவர்கள் வலியுறுத்தியும் அவர் அவ்வாறு செய்யாததால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், பாலஸ்தீன கொடி ஒட்டப்பட்ட பேட்டில் பேட் செய்த பாகிஸ்தான் வீரர் ஆஸம் கான் அவரது சம்ளத்தில் 50 சதவிகித தொகையை அபராதமாக செலுத்த வேண்டும் என்ற முடிவை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் திரும்பப் பெற்றுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஆஸம் கானுக்கு கள நடுவர்களால் விதிக்கப்பட்ட 50 சதவிகித அபாரதத் தொகை குறித்த முடிவை பரிசீலனை செய்தோம். இந்த முடிவை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தள்ளுபடி செய்கிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆஸம் கானுக்கு விதிக்கப்பட்ட அபாராதத் தொகையை முழுவதுமாக தள்ளுபடி செய்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், மீதமுள்ள போட்டிகளில் ஆஸம் கான் பாலஸ்தீன கொடி ஒட்டிய பேட்டில் தொடர்ந்து பேட் செய்வரா அல்லது சாதாரண பேட்டில் பேட் செய்வாரா என்பது குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.