இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ள ஆஸ்திரேலிய அணியிடம் திட்டம் இருப்பதாக அந்த அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.
உலகக் கோப்பை தொடர் இன்று (அக்டோபர் 5) தொடங்கியது. இன்று நடைபெற்று வரும் முதல் ஆட்டத்தில் நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன. இந்தியா வரும் அக்டோபர் 8 ஆம் தேதி தனது முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.
இதையும் படிக்க: தேசியக் கொடியை கீழே விடாமல் பிடித்த நீரஜ் சோப்ரா!
இந்த நிலையில், இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ள ஆஸ்திரேலிய அணியிடம் திட்டம் இருப்பதாக அந்த அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார். அண்மையில் இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்றது ஆஸ்திரேலியாவுக்கு நம்பிக்கை கொடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அப்போது அவர் பேசியதாவது: இந்தியாவுக்கு எதிரான முதல் போட்டியில் விளையாட ஆஸ்திரேலியாவுக்கு ஓரிரு நாள்களே உள்ளன. அந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடுவதற்கான பயிற்சியில் ஆஸ்திரேலிய அணி ஈடுபட்டுள்ளது. ஆஸ்திரேலிய அணி வீரர்கள் அதிக அளவிலான சுழற்பந்துவீச்சை எதிர்கொண்டு பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆஸ்திரேலிய அணி வீரர்கள் இந்தியாவில் அதிகம் விளையாடியுள்ளார்கள். ஒவ்வொரு பந்துவீச்சாளரையும் எதிர்கொள்ள எங்களிடம் திட்டமுள்ளது. நாங்கள் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறோம் என்றார்.