திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதி இடைத்தேர்தலுக்கான தடையை நீக்கக் கோரி முதல்வர் விஜய் மனுசென்னை புழல் சிறை முதல்வர் விஜய் திடீர் ஆய்வுமாநில அந்தஸ்து! பதவியை ராஜிநாமா செய்யவும் தயார்: புதுவை முதல்வர் என். ரங்கசாமிநாா்வே அரசா் ஹரால்டு காலமானார்! அரசராக பட்டத்து இளவரசர் ஹாகோன் பொறுப்பேற்புதிபெத்தில் அணை உடைந்தது! நேபாளத்துக்கு புதிய எச்சரிக்கை! மீட்புப் பணிகள் நிறுத்தம்!

ஆடுகளத்தை விட்டு வெளியேறிய ஹார்திக் பாண்டியா; பந்துவீசிய விராட் கோலி!

பந்தினை தடுத்தபோது கணுக்காலில் அடிபட்டதால் ஹார்திக் பாண்டியா ஆடுகளத்தை விட்டு வெளியேறி அவருக்குப் பதிலாக சூர்யகுமார் யாதவ் ஃபீல்டிங்குக்கு வந்தார்.

Published On :2 பிப்ரவரி 2024, 8:41 am IST

பந்தினை தடுத்தபோது கணுக்காலில் அடிபட்டதால் ஹார்திக் பாண்டியா ஆடுகளத்தை விட்டு வெளியேறி அவருக்குப் பதிலாக சூர்யகுமார் யாதவ் ஃபீல்டிங்குக்கு வந்தார்.

உலகக் கோப்பையின் இன்றையப் போட்டியில்  இந்தியா - வங்கதேச அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங்கை தேர்வு செய்தது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்தப் போட்டியில் ஆட்டத்தின் 9-வது ஓவரை ஹார்தி பாண்டியா வீசினார். அந்த ஓவரின் 3-வது பந்தை வங்கதேச அணியின் பேட்ஸ்மேன் லிட்டன் தாஸ் நேராக அடிக்க அதனை காலால் தடுக்க முயன்ற ஹார்திக் பாண்டியா கால் இடறி விழுந்தார். அதில் அவருக்கு கணுக்காலில் அடிபட்டது.

இந்திய அணியின் மருத்துவக் குழு முதலுதவி செய்தும் அவருக்கு கால்களை ஊன்றி நடப்பதில் சிரமம் இருந்ததால் அவர் ஆடுகளத்தை விட்டு வெளியேறினார். அவருக்குப் பதிலாக சூர்யகுமார் ஃபீல்டிங்குக்கு வந்தார்.

ஹார்திக் 9-வது ஓவரில் 3 பந்துகளை மட்டுமே வீசியிருந்தார். மீதமுள்ள 3 பந்துகளை ரசிகர்களின் ஆரவாரத்துக்கு மத்தியில் வீச வந்தார் விராட் கோலி. அந்த ஓவரில் மீதமுள்ள மூன்று பந்துகளை வீசிய விராட் கோலி 2 ரன்கள் விட்டுக் கொடுத்தார். 

10 ஓவர்கள் முடிவில் வங்கதேசம் விக்கெட் இழப்பின்றி 63 ரன்கள் எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.