ஆடுகளத்தை விட்டு வெளியேறிய ஹார்திக் பாண்டியா; பந்துவீசிய விராட் கோலி!

பந்தினை தடுத்தபோது கணுக்காலில் அடிபட்டதால் ஹார்திக் பாண்டியா ஆடுகளத்தை விட்டு வெளியேறி அவருக்குப் பதிலாக சூர்யகுமார் யாதவ் ஃபீல்டிங்குக்கு வந்தார்.
ஆடுகளத்தை விட்டு வெளியேறிய ஹார்திக் பாண்டியா; பந்துவீசிய விராட் கோலி!
Published on
Updated on
1 min read

பந்தினை தடுத்தபோது கணுக்காலில் அடிபட்டதால் ஹார்திக் பாண்டியா ஆடுகளத்தை விட்டு வெளியேறி அவருக்குப் பதிலாக சூர்யகுமார் யாதவ் ஃபீல்டிங்குக்கு வந்தார்.

உலகக் கோப்பையின் இன்றையப் போட்டியில்  இந்தியா - வங்கதேச அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங்கை தேர்வு செய்தது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்தப் போட்டியில் ஆட்டத்தின் 9-வது ஓவரை ஹார்தி பாண்டியா வீசினார். அந்த ஓவரின் 3-வது பந்தை வங்கதேச அணியின் பேட்ஸ்மேன் லிட்டன் தாஸ் நேராக அடிக்க அதனை காலால் தடுக்க முயன்ற ஹார்திக் பாண்டியா கால் இடறி விழுந்தார். அதில் அவருக்கு கணுக்காலில் அடிபட்டது.

இந்திய அணியின் மருத்துவக் குழு முதலுதவி செய்தும் அவருக்கு கால்களை ஊன்றி நடப்பதில் சிரமம் இருந்ததால் அவர் ஆடுகளத்தை விட்டு வெளியேறினார். அவருக்குப் பதிலாக சூர்யகுமார் ஃபீல்டிங்குக்கு வந்தார்.

ஹார்திக் 9-வது ஓவரில் 3 பந்துகளை மட்டுமே வீசியிருந்தார். மீதமுள்ள 3 பந்துகளை ரசிகர்களின் ஆரவாரத்துக்கு மத்தியில் வீச வந்தார் விராட் கோலி. அந்த ஓவரில் மீதமுள்ள மூன்று பந்துகளை வீசிய விராட் கோலி 2 ரன்கள் விட்டுக் கொடுத்தார். 

10 ஓவர்கள் முடிவில் வங்கதேசம் விக்கெட் இழப்பின்றி 63 ரன்கள் எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com