புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

100வது போட்டியில் ரஷித் கான்! 

உலகக் கோப்பையின் லீக் போட்டியின் 30வது போட்டியில் ஆப்கானிஸ்தான் - இலங்கை அணிகள் மோதுகின்றன.

News image

படம்: எக்ஸ் | ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம்

Updated On :30 அக்டோபர் 2023, 3:18 pm IST

உலகக் கோப்பையின் லீக் போட்டியின் 30வது போட்டியில் ஆப்கானிஸ்தான் - இலங்கை அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்து வீச்சினை தேர்வு செய்துள்ளது. 

புள்ளிப்பட்டியலில் 5,7வது இடத்தில் முறையே இருக்கும் இலங்கை, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுவதால் இந்தப் போட்டி முக்கியமானதாக இருக்கிறது. 

ஒருநாள் போட்டிகளில் ரஷித் கான் 100வது போட்டியாக இந்தப் போட்டியில் களமிறங்கியுள்ளார். ஆப்கானிஸ்தானை சேர்ந்த 25 வயதான ரஷித் கான் உலகின் தலைசிறந்த சுழல் பந்து வீச்ச்சாளராக அறியப்படுகிறார். 94 இன்னிங்ஸில் 178 விக்கெட்டுகளை எடுத்து அசத்தியுள்ளார். 

5 விக்கெட்டுகளை 4 முறையும் சிறந்த பௌலிங் சாதனையாக 7/18 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். எக்கானமி 4.25இல் பந்து வீசக்கூடியவர்.

இந்த 100வது போட்டியில் எத்தனை விக்கெட்டுகள் எடுப்பார் என பொருத்திருந்து பார்போம். பௌலிங் மட்டுமல்லாமல் பேட்டிங்கிலும் அசத்தும் ரஷித் கான் சிறந்த ஆல் ரவுண்டராக ஆப்கானிஸ்தான் அணிக்கு இருப்பது குறிப்பிடத்தக்கது. 

13 ஓவர் முடிவில் இலங்கை அணி 58/1 ரன்கள் எடுத்துள்ளது. பதும் நிஷாங்கா - 36*, குசால் மெண்டிஸ் - 6*. திமுத் கருணாரத்னே 15 ரன்களில் ஆட்டமிழந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.