புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

கோலி பிறந்தநாள்: மறக்க முடியாததாக மாற்ற காத்திருக்கும் ஈடன் கார்டன்!

இந்திய கிரிக்கெட் அணியின் பேட்டர் விராட் கோலியின் பிறந்த நாளை கொண்டாட பெங்கால் கிரிக்கெட் வாரியம் சிறப்பான ஏற்பாடுகளை செய்து வருகின்றது.

News image

கோப்புப் படம் (விராட் கோலி)

Updated On :31 அக்டோபர் 2023, 1:45 pm IST

இந்திய கிரிக்கெட் அணியின் பேட்டர் விராட் கோலியின் பிறந்த நாளை கொண்டாட பெங்கால் கிரிக்கெட் வாரியம் சிறப்பான ஏற்பாடுகளை செய்து வருகின்றது.

இந்திய கிரிக்கெட் அணிக்காக கடந்த 15 ஆண்டுகளாக விளையாடி வரும் கோலி, பல்வேறு உலக சாதனைகளை படைத்துள்ளார். இதுவரை ஒருநாள் போட்டிகளில் 48 சதங்கள் உள்பட 13,437 ரன்களும், டெஸ்ட் போட்டிகளில் 29 சதங்கள் உள்பட 8,676 ரன்களும் குவித்துள்ளார்.

இந்த நிலையில், வருகின்ற 5-ஆம் தேதி விராட் கோலியின் 35-வது பிறந்த நாள் கொண்டாடப்படவுள்ளது.

அன்றைய தினம், இந்தியாவுக்கும் தென்னாப்பிரிக்காவுக்கும் இடையே கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் உலகக் கோப்பை லீக் போட்டி நடைபெறவுள்ளது.

அந்த போட்டியை காண வரும் 70,000 ரசிகர்களுக்கும் விராட் கோலி முகம் பதித்த முகமூடி வழங்க பெங்கால் கிரிக்கெட் வாரியம் ஏற்பாடு செய்து வருகின்றது.

இதுகுறித்து செளரவ் கங்குலியின் சகோதரரும், பெங்கால் கிரிக்கெட் வாரியத்தின் தலைவருமான ஸ்னேஹாசிஷ் கங்குலி கூறியதாவது:

“70,000 பார்வையாளர்களுக்கு விராட் கோலியின் முகமூடி கொடுக்க திட்டமிட்டுள்ளோம். விராட் கோலி மைதானத்துக்குள் நடந்து வரும்போது ரசிகர்களை முகமூடி அணிய வலியுறுத்துவோம். மைதானத்தில் கேக் வெட்டவும் ஏற்பாடு செய்துள்ளோம். அந்த நாளை விராட் கோலிக்கு சிறப்பானதாக மாற்றுவோம்.” எனத் தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்வை நடத்த ஐசிசியிடம் அனுமதி கோரி பெங்கால் கிரிக்கெட் வாரியம் கடிதம் அனுப்பியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.