ஆசிய விளையாட்டுப் போட்டியின் டென்னிஸ் பிரிவில் இந்திய வீரர் ராம்குமார் ராமநாதன் போராடித் தோல்வியடைந்தார்.
சீனாவில் செப். 23 முதல் அக். 8-ஆம் தேதி வரை ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
இதில், இன்று நடைபெற்ற டென்னிஸ் போட்டியில் இந்திய வீரர் ராம்குமார் ராமநாதன் ஜப்பானின் யுசுகே வாட்னுகியுடன் மோதினார்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் யுசுகே வாட்னுகியிடம் 5-7, 7-6, 6-3, 5-7 என்ற செட் கணக்கில் ராம்குமார் தோல்வி அடைந்தார். இதன்மூலம் அவர் தொடரிலிருந்தும் வெளியேறினார்.
எனினும், டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் ரவுண்ட் 3 போட்டிகளில் 2ல் கஜகஸ்தான் வீரரை 7-6, 6-4 என்ற செட்களில் வீழ்த்தி இந்திய வீரர் சுமித் நகல் வெற்றிபெற்றார். இதனைத் தொடர்ந்து அவர் காலிறுதிக்கு முன்னேறினார். இதனால், வெண்கலப்பதக்கம் உறுதியாகியுள்ளது.