சீனாவில் நடைபெறும் உலகக் கோப்பை வில்வித்தை போட்டியில் இறுதிப் போட்டிக்கு தேர்வாகியுள்ளார் இந்தியாவின் ஜோதி சுரேகா. ஏற்கனவே காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவுகளில் இந்தியா 3 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளது.
மகளிர் அணி, ஆடவர் அணி, காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியாவின் அபிஷேக் வா்மா/ஜோதி சுரேகா கூட்டணி 3 தங்கம் வென்றனர்.
இந்நிலையில், ஆந்திரத்தைச் சேர்ந்த ஜோதி சுரேகா ரீகா்வ் மகளிர் தனிநபா் பிரிவில் எஸ்டோனியாவின் மரிடா பாஸுடன் அரையிறுதியில் 149-147 என்ற புள்ளிகள் கணக்கில் வென்று இறுதிப் போட்டிக்கு தேர்வாகியுள்ளார்.
காலிறுதியில் அவ்னித் கௌரை 143-142 என்ற புள்ளிகளில் ஜோதி சுரேகா வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
ரீகா்வ் சுற்றுன் இறுதிப் போட்டிகள் நாளை நடைபெறவிருக்கிறது.