ஜோதி சுரேகா
ஜோதி சுரேகா

வில்வித்தை: இந்தியாவின் ஜோதி சுரேகா இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்!

சீனாவில் நடைபெறும் உலகக் கோப்பை வில்வித்தை போட்டியில் இறுதிப் போட்டிக்கு தேர்வாகியுள்ளார் இந்தியாவின் ஜோதி சுரேகா.
Published on

சீனாவில் நடைபெறும் உலகக் கோப்பை வில்வித்தை போட்டியில் இறுதிப் போட்டிக்கு தேர்வாகியுள்ளார் இந்தியாவின் ஜோதி சுரேகா. ஏற்கனவே காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவுகளில் இந்தியா 3 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளது.

மகளிர் அணி, ஆடவர் அணி, காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியாவின் அபிஷேக் வா்மா/ஜோதி சுரேகா கூட்டணி 3 தங்கம் வென்றனர்.

இந்நிலையில், ஆந்திரத்தைச் சேர்ந்த ஜோதி சுரேகா ரீகா்வ் மகளிர் தனிநபா் பிரிவில் எஸ்டோனியாவின் மரிடா பாஸுடன் அரையிறுதியில் 149-147 என்ற புள்ளிகள் கணக்கில் வென்று இறுதிப் போட்டிக்கு தேர்வாகியுள்ளார்.

ஜோதி சுரேகா
உலகக் கோப்பை வில்வித்தை: 3 தங்கப் பதக்கங்களை வென்ற இந்திய அணிகள்!

காலிறுதியில் அவ்னித் கௌரை 143-142 என்ற புள்ளிகளில் ஜோதி சுரேகா வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

ரீகா்வ் சுற்றுன் இறுதிப் போட்டிகள் நாளை நடைபெறவிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com