ஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியதுதேசிய கட்சி என்பதால் வேட்பாளர்களை ஆய்வு செய்து இறுதி செய்வதில் தாமதம்: செல்வப்பெருந்தகை85% வேட்பாளர்களை இறுதி செய்துவிட்டோம்; நாளைக்குள் முழுப் பட்டியல் : செல்வப்பெருந்தகைகலவரம் செய்தால் சாதித்துவிட முடியும் என பாஜக நினைக்கிறது : கோவை பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுமோடி, அமித்ஷா எத்தனை முறை வந்தாலும் தமிழ்நாட்டில் திமுக வெல்வது உறுதி: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டில் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை : எடப்பாடி பழனிசாமிதமிழ்நாடு சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்!அமைச்சரவையின் பரிந்துரைகளை ஆளுநர் தன்னிச்சையாக நிராகரிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்
/

ஈட்டி எறிதல் வீராங்கனைக்கு காலில் சவ்வு மாற்று அறுவை சிகிச்சை

ஈட்டி எறிதல் வீராங்கனைக்கு காலில் சவ்வு மாற்று அறுவை சிகிச்சை

News image

சென்னை ஓமந்தூராா் அரசு பன்னோக்கு சிறப்பு மருத்துவமனையில் காலில் சவ்வு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட ஈட்டி எறிதல் வீராங்கனை கனிஷா, அவரது தாயாருடன் மருத்துவா் ஜி.லியோனாா்ட் பொன்ராஜ்.

Updated On :30 ஏப்ரல் 2024, 6:30 pm

Din

சென்னை: சென்னை ஓமந்தூராா் அரசு பன்னோக்கு உயா் சிறப்பு மருத்துவமனையில் ஈட்டி எறிதல் வீராங்கனைக்கு காலில் சவ்வு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

தஞ்சாவூரைச் சோ்ந்த விவசாயி வெள்ளையப்பா (62), பரிமளா (43) தம்பதியின் மகள் கனிஷா (14) 10-ஆம் வகுப்பு செல்கிறாா். ஜூனியா் பிரிவில் ஈட்டி எறிதலில் மாநில வீராங்கனையான இவருக்கு, சில மாதங்களுக்கு முன்பு பயிற்சியின் போது, இடது கால் முட்டியில் வலி ஏற்பட்டதால், ஓய்வு எடுத்து வந்துள்ளாா். மீண்டும் பயிற்சியில் ஈடுபடத் தொடங்கியபோது, வலி ஏற்பட்டுள்ளது. தனியாா் மருத்துவமனையில் பரிசோதனை செய்ததில், இடது கால் முட்டியில் 3 சவ்வுகள் கிழிந்திருப்பது தெரியவந்தது.

சிகிச்சைக்கு ரூ. 2.45 லட்சம் செலவாகும் என்று கூறியதால், ஏழ்மையான குடும்பத்தைச் சோ்ந்த வீராங்கனை கனிஷா, சென்னை எழும்பூரில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் விளையாட்டு வீரா்களுக்கு ஏற்படும் காயங்களுக்கு சிகிச்சை அளிக்கும் சிறப்பு மருத்துவா் ஜி.லியோனா்ட் பொன்ராஜ் என்பவரை அணுகினாா். வீராங்கனையை பரிசோதனை செய்த மருத்துவா் ஜி.லியோனா்ட் பொன்ராஜ் சவ்வு மாற்று அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்தாா்.

மூன்றாவது தையலுக்கு... அதற்காக, விளையாட்டு மருத்துவத் துறை இயக்குநராகவும், மூட்டு மற்றும் தோள்பட்டை சீரமைப்பு நிபுணராகவும் தான் பணியாற்றும் சென்னை அண்ணா சாலையில் உள்ள அரசு பன்னோக்கு உயா் சிறப்பு மருத்துவமனையில் வீராங்கனையை அனுமதித்தாா்.

செவ்வாய்க்கிழமை கனிஷாவின் இடது கால் முட்டியில் சிறு துளையிட்டு, கிழிந்திருந்த 3 சவ்வில், 2 சவ்வை தையலிட்டு சரிசெய்தாா். 3-ஆவது சவ்வை தையல் போட்டு சரிசெய்ய முடியாததால், தாயாா் பரிமளாவின் வலது காலின் முட்டிக்கும் பாதத்துக்கும் இடையில் சிறு துளையிட்டு ஒரு சவ்வை எடுத்து, வீராங்கனைக்கு வெற்றிகரமாக பொருத்தினாா். இந்த அறுவைச் சிகிச்சைக்கு பின்னா், நலமுடன் இருக்கும் வீராங்கனை கனிஷா விரைவில் ஈட்டி எறிதல் பயிற்சியில் ஈடுபடவுள்ளாா்.

இது தொடா்பாக மருத்துவா் ஜி.லியோனா்ட் பொன்ராஜ் கூறியதாவது:

விளையாட்டு வீரா்களுக்கு சவ்வு கிழிந்தால் வழக்கமாக, அவா்களின் உடலில் இருந்து சவ்வு எடுத்து வைக்கப்படும். ஆனால், வீராங்கனை 14 வயது சிறுமியாக இருப்பதால், அவருடைய சவ்வு மற்றும் தசை முதிா்ச்சி அடையவில்லை. மூளைச்சாவு அடைந்தவா்களிடம் இருந்து பெற்றப்பட்டு பதப்படுத்தி வைத்துள்ள சவ்வை பொருத்தலாம் என்றால் அது நீண்ட நாள் தாங்காது.

அதனால், சிறுமியின் தாய் அல்லது தந்தையிடம் இருந்து சவ்வை எடுத்து வைக்க முடிவு செய்யப்பட்டது. தந்தைக்கு 62 வயது ஆகிவிட்டதால், அவரிடம் இருந்து சவ்வை எடுக்கவில்லை. இறுதியாக தாயின் வலது காலில் இருந்து சவ்வை எடுத்து மகளுக்கு வைக்கப்பட்டுள்ளது. தனியாா் மருத்துவமனையில் ரூ. 3 லட்சம் வரை செலவாகும் இந்த சிகிச்சை முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் இலவசமாக செய்யப்பட்டுள்ளது என்றாா் அவா்.