பெங்களூருவில் விரைவில் புதிய தேசிய கிரிக்கெட் அகாதெமி!

பெங்களூருவில் விரைவில் புதிய தேசிய கிரிக்கெட் அகாதெமி திறக்கப்பட உள்ளதாக பிசிசிஐ செயலர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.
பெங்களூருவில் விரைவில் புதிய தேசிய கிரிக்கெட் அகாதெமி!
படம் | ஜெய் ஷா (எக்ஸ்)
Published on
Updated on
1 min read

புதிய தேசிய கிரிக்கெட் அகாதெமியில் பயிற்சி மேற்கொள்வற்காக 45 ஆடுகளங்கள் (பிட்ச்), பெரிய நீச்சல் குளம் மற்றும் இதர வசதிகள் அனைத்தும் இடம்பெற்றிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெங்களூருவில் விரைவில் புதிய தேசிய கிரிக்கெட் அகாதெமி!
யார் இந்த ஏஞ்செலா காரினி? இமென் கெலிஃபுடன் சண்டையிட மறுக்கக் காரணம் என்ன?

இது தொடர்பாக பிசிசிஐ செயலர் ஜெய் ஷா அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: பிசிசிஐயின் புதிய தேசிய கிரிக்கெட் அகாதெமியின் வேலைகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டன. புதிய தேசிய கிரிக்கெட் அகாதெமி விரைவில் பெங்களூருவில் திறந்து வைக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன் எனப் பதிவிட்டுள்ளார்.

இந்த புதிய தேசிய கிரிக்கெட் அகாதெமியின் மூலம் கிரிக்கெட்டில் சாதிக்க வேண்டும் என நினைக்கும் பலரும் தங்களது திறமைகளை மேம்படுத்திக் கொள்ள முடியும். அவர்களின் திறமையை வளர்த்துக் கொள்வதற்கான அனைத்து வசதிகளும் இந்த புதிய தேசிய கிரிக்கெட் அகாதெமியில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெங்களூருவில் விரைவில் புதிய தேசிய கிரிக்கெட் அகாதெமி!
14 பந்துகளில் ஒரு ரன் எடுக்க முடியாதது ஏமாற்றமளிக்கிறது: ரோஹித் சர்மா

தற்போது உள்ள தேசிய கிரிக்கெட் அகாதெமி பெங்களூருவில் உள்ள சின்னசுவாமி மைதான வளாகத்தில் அமைந்துள்ளது. விரைவில் தொடங்கப்படவுள்ள புதிய அகாதெமி மட்டுமின்றி, ஜம்மு காஷ்மீரில் ஒரு தேசிய கிரிக்கெட் அகாதெமியும், வடகிழக்கில் ஒரு தேசிய கிரிக்கெட் அகாதெமியும் தொடங்க பிசிசிஐ ஆலோசித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com