/

2030 கால்பந்து உலகக் கோப்பை குறித்து ரொனால்டோ நெகிழ்ச்சி..!

2030ஆம் ஆண்டுக்கான கால்பந்து உலகக் கோப்பை போட்டிகளை போர்ச்சுகல் நடத்த அனுமதி கிடைத்தது குறித்து ரொனால்டோ மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

News image

உற்சாகத்தில் ரொனால்டோ. - படம்: எக்ஸ் / கிறிஸ்டியானோ ரொனால்டோ

Updated On :12 டிசம்பர் 2024, 11:53 am IST

கால்பந்து உலகக் கோப்பை 2030ஆம் ஆண்டுக்கான போட்டிகளை போர்ச்சுகல் உள்பட 5 நாடுகள் நடத்த அனுமதி கிடைத்தது குறித்து கிறிஸ்டியானோ ரொனால்டோ மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

2034ஆம் ஆண்டுக்கான கால்பந்து உலகக் கோப்பை போட்டிகள் சௌதி அரேபியாவிலும் 2030ஆம் ஆண்டுக்கான உலகக் கோப்பை போட்டிகள் 6 நாடுகளிலும் நடைபெறுமென ஃபிபா அதிகாரபூர்வமாக நேற்று அறிவித்தது.

உருகுவே 1930இல் முதல்முறையாக போட்டிகளை நடத்தி சாம்பியன் பட்டம் பெற்றது. தற்போது நூற்றாண்டை முன்னிட்டு உருகுவே நாட்டிலும் ஒரு போட்டி நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து ரொனால்டோ போர்ச்சுகல் ஜெர்ஸி அணிந்த் புகைப்படத்தை பகிர்ந்து தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியதாவது:

கனவு நனவானது. 2030ஆம் ஆண்டுக்கான உலகக் கோப்பை போட்டிகளை போர்ச்சுகல் நடத்த அனுமதி வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. மிகவும் சிறப்பான உலகக் கோப்பையாக இருக்கும் என்றார்.

5 உலகக் கோப்பை தொடரில் கோல் அடித்த ஒரே வீரர் என்ற சாதனையை ரொனால்டோ படைத்துள்ளார். 2030 உலகக் கோப்பையில் அவர் விளையாடுவாரென எதிர்பார்க்கப்படுகிறது.

39 வயதாகும் ரொனால்டோ இதுவரை 900க்கும் அதிகமான கோல்கள் அடித்து சாதனை படைத்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.