பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

ஜீன்ஸ் அணிந்து பங்கேற்ற கார்ல்சென்..! தாமதம் ஏன் தெரியுமா?

பிரபல செஸ் வீரர் மாக்னஸ் கார்ல்சென் மீண்டும் ஜீன்ஸ் அணிந்துகொண்டு போட்டியில் பங்கேற்றார்.

படங்கள்: கார்ல்சென். ஃபிடே

Published On :

பிரபல செஸ் வீரர் மாக்னஸ் கார்ல்சென் தற்காலிக தடைக்குப் பிறகு மீண்டும் ஜீன்ஸ் அணிந்துகொண்டு போட்டியில் பங்கேற்றார்.

5 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற மாக்னஸ் கார்ல்சென் ஜீன்ஸ் அணிந்து உலக ரேபிட் அன்ட் பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டிக்கு வந்ததால் போட்டியில் இருந்து நீக்கப்பட்டிருந்தார்.

ஆடைக் கட்டுப்பாட்டை மீறியதாக கார்ல்செனுக்கு முதல்முறையாக 200 டாலர் (இந்திய மதிப்பில் ரூ.17,076) அபராதம் விதிக்கப்பட்டது.

பின்னர் ஃபிடே உடன் கார்ல்சென் சமாதனாம் ஆகி இன்றைய போட்டியில் பங்கேற்றார்.

இன்றைய போட்டிக்கும் கார்ல்சென் ஒரு நிமிடம் தாமதமாக வந்தது குறிப்பிடத்தக்கது.

முதல் ரவுண்டில் 52 வயதான ஜெர்மன் கிராண்ட்மாஸ்டர் மைக்கல் பெஜாய்ட் உடன் மோதினார். ஒரு நிமிடம் கழித்து தாமதமாக தனது முதல் நகர்வை நகத்தினார். பின்னர் 49 நொடிகள் மீதமிருக்கும் நேரத்தில் போட்டியில் வென்று அசத்தினார்.

இது குறித்து கார்ல்சென், “மீண்டும் ஜீன்ஸ் உடன் விளையாடியது மகிழ்ச்சி. இன்றுதான் புதிய ஜீன்ஸ் வாங்கியதால் சற்று தாமதமாகிவிட்டது. ஆனால், சரியாக வரவேண்டியது என்னுடைய கடமைதான்” என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.