சானியா மிர்சாவைப் பிரிந்த சோயிப் மாலிக் மறுமணம்!

சானியா மிர்சாவின் முன்னாள் கணவரும் கிரிக்கெட் வீரருமான சோயிப் மாலிக் மறுமணம் செய்துள்ளார்.
சானியா மிர்சாவைப் பிரிந்த சோயிப் மாலிக் மறுமணம்!

இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா மற்றும் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக் இரண்டு பேரும் கடந்த 2010 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு  இஷான் என்ற மகன் உள்ளார். 

சமீப காலமாக நட்சத்திர தம்பதிகளான சானியா - சோயிப்  இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வருவதாகக் கூறப்பட்டது. அவர்களின் பிரிவுக்கான காரணம் எதுவும் இதுவரை வெளியாகிவில்லை. 

இதற்கிடையே, இருவரும் பிரிந்திருந்த நிலையில் சில மாதங்களுக்கு முன் சானியா மிர்சா இன்ஸ்டாகிராம் பதிவில், "உடைந்த இதங்கள் எங்கே செல்கின்றன. அல்லாவை தேடி" எனப் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில், இந்த குழப்பங்களுக்கு மத்தியில் சோயிப் மாலிக் பாகிஸ்தான் நடிகை சனா ஜாவத்தைத் மறுமணம் செய்துள்ளார். அதிகாரப்பூர்வமாக சானியா மிர்சாவின் விவாகரத்து விசயம் வெளியே தெரிவதற்கு முன் இத்திருமணம் நிகழ்ந்துள்ளதால் சானியா மிர்சாவை,  சோயிப் மாலிக் தலாக் செய்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com