கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

பந்துவீச்சில் அசத்தல்; டி20 தொடரை சமன்செய்த இந்திய அணி!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

News image

படம் | பிசிசிஐ

Updated On :9 ஜூலை 2024, 4:16 pm

DIN

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் இன்று (ஜூலை 9) நடைபெற்றது.

இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த தென்னாப்பிரிக்க அணி இந்தியாவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 84 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக தஸ்மின் பிரிட்ஸ் 20 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து, அன்னக்கே போஸ்ச் அதிகபட்சமாக 17 ரன்கள் எடுத்தார். இந்தியா தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய பூஜா வஸ்த்ரகார் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். ராதா யாதவ் 3 விக்கெட்டுகளையும், அருந்ததி ரெட்டி, ஸ்ரேயங்கா பாட்டீல் மற்றும் தீப்தி சர்மா தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

இதனையடுத்து, 85 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி 10.5 ஓவர்களில் இலக்கை எட்டி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சிறப்பாக விளையாடிய ஸ்மிருதி மந்தனா அரைசதம் எடுத்து அசத்தினார். ஸ்மிருதி மந்தனா 54 ரன்களுடனும் (8 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள்), ஷஃபாலி வர்மா 27 ரன்களுடனும் (3 பவுண்டரிகள்) களத்தில் இருந்தனர்.

இந்த வெற்றியின் மூலம், 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது. இரு அணிகளுக்கும் இடையிலான 2-வது டி20 போட்டிக்கு மழையினால் முடிவு எட்டப்படாதது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.