சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புஇரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! 1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்!
/

கௌதம் கம்பீருக்கு புகழாரம் சூட்டிய இந்திய வேகப் பந்துவீச்சாளர்!

இந்திய அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீருக்கு இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் புகழாரம் சூட்டியுள்ளார்.

News image

கௌதம் கம்பீர் - படம் | கேகேஆர் (எக்ஸ்)

Updated On :13 ஜூலை 2024, 4:16 pm IST

அணியை வெற்றி பெற வைக்க வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்துடன் செயல்படுபவர் கௌதம் கம்பீர் என இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஆவேஷ் கான் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக செயல்பட்டு வந்த ராகுல் டிராவிட் டி20 உலகக் கோப்பைத் தொடருடன் ஓய்வு பெற்றார். இதனையடுத்து, இந்திய அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக கௌதம் கம்பீர் நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கைக்கு எதிராக இம்மாத இறுதியில் தொடங்கவுள்ள தொடரிலிருந்து இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக கௌதம் கம்பீர் பொறுப்பேற்றுக் கொள்ளவுள்ளார்.

இந்த நிலையில், அணியை வெற்றி பெற வைக்க வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்துடன் செயல்படுபவர் கௌதம் கம்பீர் என இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஆவேஷ் கான் அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

ஆவேஷ் கான் (கோப்புப் படம்)

ஆவேஷ் கான் (கோப்புப் படம்)

இது தொடர்பாக அவர் பேசியதாவது: கௌதம் கம்பீரிடமிருந்து நான் கற்றுக் கொண்டது என்னவென்றால், நமக்கு எதிராக விளையாடுபவரைக் காட்டிலும் 100 சதவிகித உழைப்பை கொடுத்து நாம் சிறப்பாக விளையாட வேண்டும் என்பதுதான். அணியில் ஆலோசனை நடைபெறும் போதும் மற்றும் தனித்தனியாக வீரர்களிடத்தில் பேசும் போதும் கௌதம் கம்பீர் குறைவாகவே பேசுவார். ஆனால், என்ன செய்துமுடிக்கப்பட வேண்டும் என்பதை தெளிவாக கூறிவிடுவார். வீரர்களுக்கென்று அவர் தனித்தனியாக பொறுப்புகளை கொடுத்துவிடுவார். அவர் எப்போதும் அணியின் பயிற்சியாளராகவே இருந்துள்ளார். அனைத்து வீரர்களும் தங்களது 100 சதவிகித உழைப்பை வழங்க வேண்டுமென அவர் எப்போதும் எதிர்பார்ப்பார் என்றார்.

லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் ஆலோசகராக கௌதம் கம்பீர் செயல்பட்டபோது, ஆவேஷ் கான் அந்த அணிக்காக விளையாடியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.