ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு கம்பீர் சரியானவரா? கங்குலி பதில்!

இந்திய அணிக்கு கௌதம் கம்பீர் சிறந்த பயிற்சியாளராக இருப்பாரா என்ற கேள்விக்கு கங்குலி பதிலளித்துள்ளார்.

News image
Updated On :1 ஜூன் 2024, 10:33 am

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருடன் இந்திய தலைமைப் பயிற்சியாளர் ராகுல் திராவிட்டின் பதவிக் காலம் நிறைவடையவுள்ளது. இதனால் புதிய தலைமைப் பயிற்சியாளரை தேர்ந்தெடுப்பதற்கான பணிகளை பிசிசிஐ மேற்கொண்டு வருகின்றது.

கூகுள் விண்ணப்பங்கள் மூலம் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என்று மே 13-ஆம் தேதி பிசிசிஐ தெரிவித்திருந்தது. மே 27ஆம் தேதி வரை விண்ணப்பத்துக்கான காலஅவகாசம் நிறைவடைந்த நிலையில், மொத்தம் 3,000-க்கும் அதிகமானோர் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியது.

வெளிநாட்டு பயிற்சியாளர்களான ஜஸ்டின் லாங்கர், ரிக்கி பாண்டிங் ஆகியோரிடம் இது குறித்து பிசிசிஐ அணுகியதாகவும் அவர்கள் மறுத்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

பின்னர் கௌதம் கம்பீர் தேர்வு செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகின. இது குறித்து பிடிஐ செய்தி நிறுவனத்திடம் அளித்த பேட்டியில் கங்குலி பேசியதாவது:

வெளிநாட்டு பயிற்சியாளர்களைவிட இந்தியர்கள் யாராவது தேர்வு செய்தால் நன்றாக இருக்கும். ஏனெனில் இந்தியாவில் அபரிமிதமான திறமைசாலிகள் பலர் இருக்கின்றனர். திராவிட்டுக்குப் பதிலாக கம்பீர் தேர்வானால் நன்றாகத்தான் இருக்கும்.

கம்பீர் விண்ணப்பதாரா தெரியவில்லை. அவர் விண்ணப்பித்தால் மட்டுமே வேலை கிடைக்கும். மே.27ஆம் தேதிதான் விண்ணப்பிக்க கடைசிநாள். ஆனால் பிசிசிஐ இதனை நீட்டித்திருக்கலாம். கம்பீர் விண்ணப்பித்து இருந்தால் அவர் நல்ல பயிற்சியாளராக இருப்பார்.

கேகேஆர் அணிக்காக கம்பீர் சிறப்பாக செயல்பட்டதை தொலைக் காட்சிகளில் பார்க்கிறோம். போட்டியில் வெல்ல வேண்டுமென்ற பசி, ஆர்வம் அனைத்தும் கம்பீரிடம் இருக்கிறது. கம்பீர் விண்ணப்பித்து பிசிசிஐ தேர்வாணயம் அவரை தேர்வு செய்தால் மகிழ்ச்சி. அவர் பொருத்தமான தேர்வாக அமைவார் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.