டாடா குழுமத் தலைவராக சந்திரசேகரன் தொடர்வார்! முடிவை மாற்றிய நிர்வாகக் குழு!இன்று கல்வி, நாளை வேறாக இருக்கலாம்! மனநிலையை மாற்ற தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை!நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!மதுரை எய்ம்ஸ் புறநோயாளிகள் பிரிவு ஜனவரி 1 முதல் தொடக்கம்! பெரியார் பிறந்த நாள்: மு.க. ஸ்டாலின் மரியாதை! சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு!சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக வாழ்ந்தவர் பெரியார்! அண்ணாமலை புகழாரம்!முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் காலமானார்!

தோனியின் சாதனையை முறியடித்த ரோஹித் சர்மா!

55 போட்டிகளில் விளையாடி 42 வெற்றிகளை ரோஹித் சர்மா பதிவு செய்துள்ளார்.

Adam Hunger

Published On :

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் சாதனையை தற்போதைய கேப்டன் ரோஹித் சர்மா முறியடித்தார்.

டி20 உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்க அமெரிக்கா சென்றுள்ள இந்திய அணி, நேற்று அயர்லாந்துக்கு எதிராக விளையாடிய முதல் போட்டியில் அபார வெற்றியை பதிவு செய்தது.

முதலில் அயா்லாந்து 16 ஓவா்களில் 10 விக்கெட்டுகளை இழந்து 96 ரன்களே சோ்க்க, இந்தியா 12.2 ஓவா்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 97 ரன்கள் எடுத்து வென்றது. இந்த ஆட்டத்தில் இந்திய தரப்பில் ஹா்திக் பாண்டியா, ஜஸ்பிரீத் பும்ரா, அா்ஷ்தீப் சிங் ஆகியோா் பௌலிங்கில் அசத்த, பேட்டிங்கில் கேப்டன் ரோஹித் சா்மா, ரிஷப் பந்த் சிறப்பாக செயல்பட்டனா்.

இந்த வெற்றியின் மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் அதிக போட்டிகளில் வெற்றி பெற்று கொடுத்த இந்திய கேப்டன் என்ற சாதனையை ரோஹித் சர்மா படைத்துள்ளார்.

இந்திய டி20 அணியின் கேப்டனாக 55 போட்டிகளில் விளையாடி 42 வெற்றிகளை ரோஹித் சர்மா பதிவு செய்துள்ளார். இந்த தொடரில் இந்திய அணி, ரோஹித் தலைமையில் இன்னும் பல போட்டிகளில் விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னதாக முன்னாள் கேப்டன் தோனி, 72 போட்டிகளில் 41 வெற்றிகளை இந்திய அணிக்கு பெற்றுக் கொடுத்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.