அலக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு லான்ஸ் குளுஸ்னர் உதவிப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் தொடங்குவற்கு இன்னும் ஓரிரு வாரங்களே உள்ளன. ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூவை எதிர்கொள்கிறது.
ஐபிஎல் தொடரில் கடந்த 2022 ஆம் ஆண்டு அறிமுகமான லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் கடந்த இரண்டு சீசன்களிலுமே பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றன. இந்த முறையும் அதே உத்வேகத்துடன் லக்னௌ அணி களம் காண உள்ளது.
இந்த நிலையில், லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு லான்ஸ் குளுஸ்னர் உதவிப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
லக்னௌ அணியின் தலைமைப் பயிற்சியாளராக ஜஸ்டின் லாங்கர் செயல்பட்டு வரும் நிலையில், அவருடன் உதவிப் பயிற்சியாளராக குளுஸ்னர் இணைந்துள்ளார்.
லான்ஸ் குளுஸ்னர்
முன்னாள் தென்னாப்பிரிக்க ஆட்டக்காரர். 52 வயதாகும் இவர் சர்வதேசப் போட்டிகளில் பல நாடுகளுக்கு தலைமைப் பயிற்சியாளராக இருந்துள்ளார். உள்ளூர் போட்டிகளில் டெல்லி மற்றும் திரிபுரா அணிகளுக்கு ஆலோசகராகவும் இருந்து வருகிறார். டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணியிலும் பயிற்சியாளராக செயல்பட்டுள்ளார்.
கடந்த ஆண்டு கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் கயானா அமேசான் வாரியர்ஸ் அணியின் பயிற்சியாளராக செயல்பட்ட இவர் கயானா அமேசான் வாரியர்ஸ் அணி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வெல்ல காரணமாக இருந்தார். சர்வதேச அரங்கில் தென்னாப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு பயிற்சியாளராக செயல்பட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விபத்தில் உயிரிழந்த தனியாா் கல்லூரி உதவிப் பேராசிரியா் குடும்பத்துக்கு ரூ. 97 லட்சம் இழப்பீடு

பாலியல் தொல்லை: திருச்சி என்ஐடி பேராசிரியா் கைது

மீண்டும் தில்லி கேபிடல்ஸில் இணைந்த ரிஷப் பந்த்! காரணம் என்ன?

லக்னௌ அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து ரிஷப் பந்த் விலகல்!
விடியோக்கள்

ரயிலில் Solar Panel-கள்? இந்திய ரயில்வேயின் புதிய முயற்சி! | Indian Railways

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke





