ஐபிஎல் தொடருக்கான பயிற்சியைத் தொடங்கிய சிஎஸ்கே; தோனி எப்போது வருவார்?

இந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கான பயிற்சியை சென்னை சூப்பர் கிங்ஸ் தொடங்கியுள்ளது.
ஐபிஎல் தொடருக்கான பயிற்சியைத் தொடங்கிய சிஎஸ்கே; தோனி எப்போது வருவார்?

இந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கான பயிற்சியை சென்னை சூப்பர் கிங்ஸ் தொடங்கியுள்ளது.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் வருகிற மார்ச் 22 முதல் தொடங்கவுள்ளது. இன்னும் ஓரிரு வாரங்களில் போட்டிகள் தொடங்கவிருக்கும் நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் பயிற்சியைத் தொடங்குவதற்காக சென்னைக்கு வருகை புரிந்துள்ளனர்.

ஐபிஎல் தொடருக்கான பயிற்சியைத் தொடங்கிய சிஎஸ்கே; தோனி எப்போது வருவார்?
டெஸ்ட்டில் அதிக கேட்ச் பிடித்தவர்கள் பட்டியலில் ஸ்மித் புதிய சாதனை!

முதல் கட்டமாக சென்னை அணியின் தீபக் சஹார், சிமர்ஜித் சிங், ராஜவர்தன் ஹங்கேர்கர், முகேஷ் சௌதரி, பிரசாந்த் சோலங்கி, அஜய் மண்டல் ஆகியோர் பயிற்சிக்காக சென்னைக்கு வருகை புரிந்துள்ளனர். இதனை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி எப்போது வரவுள்ளார் என்பது குறித்த தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

அண்மையில் முகேஷ் அம்பானியின் மகனின் இல்லத் திருமண நிழ்ச்சியில் தோனி அவரது மனைவியுடன் கலந்து கொண்டார். அவர் விரைவில் சென்னைக்கு வருகை தந்து பயிற்சியில் ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூவை எதிர்த்து விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com