திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: முதல்வர் விஜய் வாழ்த்துதிருச்சி மாவட்ட ஆட்சியர் இருக்கையில் அமர்ந்து ரீல்ஸ்! வைரலாகும் விடியோஇன்று ஜூன்20 தங்கம் வாங்கலாமா? நேற்று குறைந்த விலை இன்று என்னவானது? அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்திநீட் மறுதேர்வே துயரம், அதில் இதுவுமா? நாக்பூர் மாணவருக்கு அபுதாபியில் தேர்வு மையம்குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்து
/

உலக சாதனை படைத்த ஜேம்ஸ் ஆண்டர்சன்!

பிரபல இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

News image

இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் - Ashwini Bhatia

Updated On :9 மார்ச் 2024, 10:26 am IST

பிரபல இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிவரும் இங்கிலாந்து அணி 1-3 என பின் தங்கியிருக்கிறது. 5வது டெஸ்டில் இந்திய அணி 477 ரன்கள் குவித்துள்ளது.

இந்தியாவில் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடிய மிகவும் வயதான வேகப்பந்து வீச்சாளர் (41 வருடம் 187 நாள்கள்) என்ற உலக சாதனையை சமீபத்தில் நிகழ்த்திய ஆண்டர்சன் தற்போது புதிய உலக சாதனையை படைத்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டில் முதன்முறையாக ஒரு வேகப் பந்து வீச்சாளர் 700 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இது மிகப் பெரிய சாதனை. 41 வயதில் வேகப் பந்து வீச்சாளராக இருப்பது மிகவும் கடினம் என கிரிக்கெட் விமர்சகர்கள் புகழ்கிறார்கள்.

2003இல் டெஸ்டில் அறிமுகமான ஆண்டர்சன் 187 போட்டிகளில் 700 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

உலக அளவில் அதிக டெஸ்ட் விக்கெட்டுகள் எடுத்த பட்டியலில் 3வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

அதிக விக்கெட் எடுத்தவர்கள் பட்டியல்:

முத்தையா முரளிதரன் - 800

ஷேன் வார்னே - 708

ஜேம்ஸ் ஆண்டர்சன் -700

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.