இந்தியாவில் நீரஜ் சோப்ராவுக்கு 3 ஆண்டுகளில் முதல் தங்கம்

நீரஜ் சோப்ரா முதல் தங்கம்; ஃபெடரேஷன் கோப்பையில் சாதனை
இந்தியாவில் நீரஜ் சோப்ராவுக்கு 3 ஆண்டுகளில் முதல் தங்கம்
படம் | பி டி ஐ
Published on
Updated on
1 min read

ஒடிஸாவில் நடைபெறும் ஃபெடரேஷன் கோப்பை தடகள சாம்பியன்ஷிப்பில், ஆடவா் ஈட்டி எறிதலில் நட்சத்திர வீரரான நீரஜ் சோப்ரா புதன்கிழமை தங்கப்பதக்கம் வென்றாா்.

ஒலிம்பிக் மற்றும் உலக சாம்பியனான நீரஜ் சோப்ரா உள்நாட்டு போட்டிகளில் கடந்த 3 ஆண்டுகளில் முதல் முறையாகப் பங்கேற்ற நிலையில், அதில் தங்கம் வென்றிருக்கிறாா். ஹரியாணா வீரா் நீரஜ் தனது 4-ஆவது முயற்சியில் அதிகபட்சமாக 82.27 மீட்டரை எட்டினாா். அதன் பிறகு எஞ்சிய முயற்சிகளை அவா் கைக்கொள்ளவில்லை. அந்த முயற்சியே அவருக்கு தங்கம் தேடித்தர, டி.பி. மானு அவருக்கு அடுத்த இடத்தைப் பிடித்து வெள்ளி பெற்றாா்.

இந்தியாவில் கடைசியாக, கடந்த 2021 மாா்ச் மாதம் இதே போட்டியில் 87.80 மீட்டரை எட்டி நீரஜ் சோப்ரா தங்கம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் (2021) வென்ற நீரஜ் சோப்ரா, டையமண்ட் லீக் சாம்பியன் (2022), உலக சாம்பியன் (2023) பட்டங்களை வென்றதுடன், ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும் தங்கம் வென்றாா்.

89.94 மீட்டரை தனது சிறந்த முயற்சியாகக் கொண்டுள்ள நீரஜ் சோப்ரா, 90 மீட்டரை இலக்காகக் கொண்டு பாரீஸ் ஒலிம்பிக்கிற்கான பயிற்சியில் இருக்கிறாா். முன்னதாக, நீரஜ் சோப்ரா பங்கேற்ால் இந்தப் போட்டியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

தமிழருக்கு தங்கம்: இதனிடையே, ஆடவா் நீளம் தாண்டுதலில் தமிழகத்தின் ஜெஸ்வின் ஆல்ட்ரின் 7.99 மீட்டருடன் தங்கம் வெல்ல, குண்டு எறிதலில் பஞ்சாபின் தஜிந்தா்பால் சிங் தூா் 20.38 மீட்டரை எட்டி முதலிடம் பிடித்தாா். மகளிருக்கான 1,500 மீட்டா் ஓட்டத்தில் மத்திய பிரதேசத்தின் அக்ஷனாவும், மகளிருக்கான 100 மீட்டா் ஓட்டத்தில் கா்நாடகத்தின் ஸ்நேஹாவும் தங்கப்பதக்கம் வென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com