பாகிஸ்தான் அணி டி20 உலகக் கோப்பையின் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என அந்த அணியின் முன்னாள் வீரர் ஷகித் அஃப்ரிடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி மழையினால் கைவிடப்பட்ட நிலையில், நேற்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.
இந்த நிலையில், பாகிஸ்தான் அணி டி20 உலகக் கோப்பையின் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் எனவும், மிடில் ஆர்டரில் விளையாடும் வீரர்கள் ஸ்டிரைக் ரேட்டில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அந்த அணியின் முன்னாள் வீரர் ஷகித் அஃப்ரிடி தெரிவித்துள்ளார்.

ஷகித் அஃப்ரிடி (கோப்புப்படம்)
இது தொடர்பாக அவர் பேசியதாவது: பாகிஸ்தான் அணியைப் பொறுத்தவரையில், வீரர்களின் மிடில் ஆர்டர் ஸ்டிரைக் ரேட் கவலைக்குரியதாக உள்ளது. அதிலும் குறிப்பாக, 7-13 ஓவர்களில் வீரர்களின் ஸ்டிரைக் ரேட் கவலையளிக்கும் விதமாக உள்ளது. ஆனால், வீரர்கள் தங்களது ஸ்டிரைக் ரேட்டில் முன்னேற்றம் கொண்டு வருவார்கள் என நம்புகிறேன். பாகிஸ்தான் அணி உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேறும். அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் போட்டி நடைபெறுவதே அதற்கு காரணம். அங்குள்ள ஆடுகளங்களின் தன்மை பாகிஸ்தான் அணிக்கு ஏற்றவாறு இருக்கும். மற்ற அணியில் உள்ள பந்துவீச்சாளர்களைக் காட்டிலும் பாகிஸ்தானிடம் வலுவான பந்துவீச்சு உள்ளது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கரூரில் கூடைப்பந்து போட்டி கேரள மின்வாரிய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி

உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல்: 22 போ் இந்திய அணி மியுனிச் பயணம்

உலகக் கோப்பை வில்வித்தை: இந்திய மகளிர் அணிக்கு பதக்கம் உறுதி

உலகக் கோப்பை வில்வித்தை: அணிகள் ஏமாற்றம்; தனிநபா் ஏற்றம்
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி




