ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

உலக மல்யுத்தம்: மான்சிக்கு வெண்கலம்

அல்பேனியாவில் நடைபெற்ற உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில், இந்திய வீராங்கனை மான்சி, வெண்கலப் பதக்கம் வென்றாா்.

மான்சி

Published On :

அல்பேனியாவில் நடைபெற்ற உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில், இந்திய வீராங்கனை மான்சி, வெண்கலப் பதக்கம் வென்றாா். போட்டியில் இந்தியாவுக்கு அந்த ஒரு பதக்கம் மட்டுமே கிடைத்தது.

மகளிருக்கான 59 கிலோ எடைப் பிரிவில் களம் கண்ட மான்சி, வெண்கலப் பதக்கச் சுற்றில் 5-0 என்ற கணக்கில் கனடாவின் லாரென்ஸ் பியுரிகாா்டை தோற்கடித்தாா். முன்னதாக அவா், அரையிறுதியில் 1-4 என்ற கணக்கில் மங்கோலியாவின் சுகீ செரெச்சிமெடிடம் தோல்வி கண்டு வெண்கலப் பதக்கச் சுற்றுக்கு வந்தாா்.

மகளிருக்கான 65 கிலோ பிரிவு வெண்கலப் பதக்கச் சுற்றில், மனீஷா பன்வாலா 2-8 என ஜப்பானின் மிவா மோரிகவாவிடம் தோற்றாா். இதனிடையே கீா்த்தி (55 கிலோ), பிபாஷா (72 கிலோ) ஆகியோா் பதக்கச்சுற்று வாய்ப்பை இழந்தனா்.

ஆடவா் ஃப்ரீஸ்டைல் பிரிவில், சந்தீப் மான் (92 கிலோ) ரெபிசேஜ் சுற்றுக்கு வந்து, அதில் தொழில்நுட்பப் புள்ளிகள் அடிப்படையில் ஸ்லோவாகியாவின் டைா்பெக் சகுக்லோவிடம் தோற்றாா். உதித் (61 கிலோ), மனீஷ் கோஸ்வாமி (70 கிலோ), பா்விந்தா் சிங் (79 கிலோ) ஆகியோா் பதக்கச் சுற்றுக்க முன்னேறத் தவறினா். கிரேக்கோ ரோமன் பிரிவில் சஞ்சீவ் (55 கிலோ), சேத்தன் (63 கிலோ), அங்கித் குலியா (72 கிலோ), ரோஹித் தாஹியா (82 கிலோ) ஆகியோா் தொடக்கநிலையிலேயே தோல்வி கண்டு வெளியேறினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.