பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

ரொனால்டோ அசத்தல்..! காலிறுதிக்கு தகுதிபெற்றது போர்ச்சுகல்!

நேஷ்னல் லீக் கால்பந்து போட்டியில் போர்ச்சுகல் அணி போலந்தை 5-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

கிறிஸ்டியானோ ரொனால்டோ - Luis Vieira

Published On :

ஐரோப்பிய கண்டத்தில் இருக்கும் நாடுகளுக்கிடையேயான நேஷ்னல் லீக் கால்பந்து போட்டியில் போர்ச்சுகள் அணியும் போலந்து அணியும் மோதின.

இந்தப் போட்டியில் போர்ச்சுகலின் நட்சத்திர நாயகன் கிறிஸ்டியானோ ரொனால்டோ 2 கோல்கள் (72', 87') அடித்து அசத்தினார்.

முதல் கோல் பெனால்டியிலும் 2ஆவது கோல் பைசைக்கிள் கிக்கிலும் கோல் அடித்து அசத்தினார்.

குரூப் ஏ1இல் போர்ச்சுகல் அணி 13 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது.

பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, ஸ்பெயின், போர்ச்சுகல் அணிகள் காலிறுதுக்கு தகுதி பெற்றுள்ளன. மார்ச் 20-23ஆம் தேதிகளில் இது நடைபெறும்.

2026ஆம் ஆண்டுக்கான உலகக் கோப்பைக்கும் இதில் வரும் 8 அணிகள் தகுதிபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

கடைசி 10 நிமிடங்களில் 3 கோல்கள் அடித்து போர்ச்சுகல் அசத்தியது.

ரொனால்டோ சர்வதேச போட்டிகளில் 135 கோல்களை அடித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இந்த தோல்வியின் மூலம் 4 புள்ளிகளுடன் ஏ1 குரூப்பில் 3ஆவது இடத்தில் உள்ள போலந்து அணி காலிறுதிக்கு தகுதிபெறும் நம்பிக்கைய இழந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.