12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

மெஸ்ஸி உலக சாதனை..! இந்தாண்டை வெற்றியுடன் முடித்த ஆர்ஜென்டீனா!

கால்பந்து உலகக் கோப்பையின் தகுதிச் சுற்றில் ஆர்ஜென்டீனா 1-0 என வெற்றி பெற்றது.

மெஸ்ஸி. - படங்கள்: ஏபி

Published On :

கால்பந்து உலகக் கோப்பையின் தகுதிச் சுற்றில் ஆர்ஜென்டீனா 1-0 என வெற்றி பெற்றது.

2026ஆம் ஆண்டுக்கான கால்பந்து உலகக் கோப்பைக்கான தகுதிச் சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் ஆர்ஜென்டினா அணியும் பெரு அணியும் மோதின.

இந்தப் போட்டியில் 55ஆவது நிமிஷத்தில் மெஸ்ஸி உதவியினால் லௌடாரோ மார்டினீஸ் கோல் அடித்து அசத்தினார்.

இந்த கோல் அடிக்க மெஸ்ஸி உதவியதன் மூலம் அமெரிக்காவின் தேசிய அணியின் லெஜெண்ட் லண்டோன் டோனோவன் சர்வதேச கால்பந்து போட்டிகளில் அதிக கோல்கள் (58) அடிக்க உதவியதை சமன்செய்துள்ளார்.

இந்த கோல் மூலம் மார்டினீஸ் தனது ஆர்ஜென்டினா அணிக்காக 35ஆவது கோலை பதிவு செய்துள்ளார். இதன் மூலம் லெஜெண்ட் தியாகோ மாரடோனாவுடன் சமன்செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

2026ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் மெஸ்ஸி விளையாடுவாரா எனத் தெரியவில்லை. இந்தாண்டுக்கான கடைசி போட்டியை மெஸ்ஸி விளையாடினார். இதை “மறக்க முடியாத ஆண்டு” எனக் கூறினார்.

கடைசியாக ஆர்ஜென்டினா விளையாடிய 70 போட்டிகளில் 65 போட்டிகளில் வென்று அசத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கேரளாவில் மெஸ்ஸி விளையாட வருவதாக தகவல் வெளியாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.