நேபாளத்தின் மற்றொரு அமைச்சர் பதவி விலகல்! பிரதமர் பாலேந்திர ஷா அரசில் 3-வது ராஜிநாமா!மடப்புரம் காவலாளி அஜித்குமார் கொலை! 4 காவலர்கள் மீதான வழக்கை கொலை வழக்காக மாற்ற உத்தரவுஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து ஹர்ஷித் ராணா விலகல்!ஆபரேஷன் அன்வேஷன்: 17 மாநிலங்களில் 101 குழந்தைகளை மீட்ட காவல்துறை!

பாலன் டி’ஓர் விருது பட்டியலில் மெஸ்ஸி, ரொனால்டோ பெயர் இல்லாததால் ரசிகர்கள் அதிர்ச்சி!

பாலன் டி’ஓர் விருது பரிந்துரை பட்டியலில் மெஸ்ஸி, ரொனால்டோ பெயர் இல்லாததால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

மெஸ்ஸி | ரொனால்டோ

Published On :

கால்பந்து உலகில் மிக உயரிய விருதாகக் கருதப்படும் பாலன் டி’ஓர் விருது பரிந்துரைப் பட்டியலில் கால்பந்து ஜாம்பவான்களான லயனல் மெஸ்ஸி, கிறிஸ்டியானோ ரொனால்டோ பெயர் இல்லாததால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

பாலன் டி’ஓர் விருதுகள் வருகிற அக்டோபர் மாதம் வழங்கப்படவுள்ளன. இந்த நிலையில் இந்த விருதை இதுவரை 8 முறை வென்றவரான மெஸ்ஸியின் பெயரும், 6 முறை வென்றவரான ரொனால்டோவின் பெயரும் இடம்பெறாதது கால்பந்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பாலன் டி’ஓர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர்களின் பெயர்கள்

பாலன் டி’ஓர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர்களின் பெயர்கள்

வினிசியஸ் ஜூனியர், ரோட்ரி, ஜூட் பெல்லிங்ஹாம், கைலியன் எம்பாப்பே, எர்லிங் ஹாலண்ட் மற்றும் ஹாரி கேன் ஆகியோர் பெயர்கள் பாலன் டி’ஓர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

மிகவும் இளம் வீரரான ஸ்பெயின் நாட்டின் லாமின் யாமலும் இந்த விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

2006 ஆம் ஆண்டு முதல் முறையாக பாலன் டி’ஓர் விருதுக்கு மெஸ்ஸிக்கு பரிந்துரைக்கப்பட்டார். அதன் பின்னர் 2009 ஆம் ஆண்டு முதல் முறையாக இந்த விருதை வென்றார். அதன் தொடர்ச்சியாக 2010, 2011, 2012, 2013 ஆம் ஆண்டுகளில் 4 விருதுகளை வென்றார்.

2004 ஆம் ஆண்டில் ரொனால்டோ முதல் முறையாக இந்த விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார்.

2008 ஆம் ஆண்டில் இருந்து மெஸ்ஸியும், ரொனால்டோவும் சேர்ந்து 13 முறை இந்த விருதை வென்றுள்ளனர்.

பிரான்ஸ் இதழால் உருவாக்கப்பட்ட பாலன் டி’ஓர் விருதை முதன்முதலில் 1956 ஆம் ஆண்டு இங்கிலாந்து வீரரான ஸ்டான்லி மேத்யூஸ் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.