வயநாட்டில் நிலச்சரிவு! சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரம்! முதல்வர் கரூர் செல்ல தடையில்லை! திமுகவின் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்பிரதமர் மோடிக்கு 35-வது சர்வதேச விருது! இந்தோனேசியா வழங்கியது! கரூர் செல்லவிடாமல் முதல்வர் விஜய்யை திமுக தடுக்கிறது! அமைச்சர் நிர்மல் குமார் அமைச்சர்கள் தேவையின்றி ஆய்வுக்குச் செல்லக் கூடாது! முதல்வர் அலுவலகம் முதல்வா் விஜய், அமைச்சா் ஆதவ் உள்ளிட்டோருக்கு எதிரான திமுக மனு இன்று விசாரணைதமிழகத்தில் ஜூலை 12 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!அதிமுகவில் டிடிவி தினகரனை இணைக்க எடப்பாடி பழனிசாமியிடம் நிா்வாகிகள் வலியுறுத்தல்காஸாவில் ஹமாஸ் அரசு கலைப்பு!
/

செஸ் ஒலிம்பியாட்: கடந்தமுறை தங்கம் வென்ற அணியுடன் டிரா செய்த இந்தியா!

செஸ் ஒலிம்பியாட்டின் 9ஆவது சுற்றில் இந்தியாவின் 2 அணிகளும் வெற்றி தோல்வி இல்லாமல் டிராவில் முடிந்தன.

News image

டிரா செய்த இந்திய அணி வீரர். - படம்: எக்ஸ் / ஃபிடே

Updated On :21 செப்டம்பர் 2024, 4:13 pm IST

ஹங்கேரி தலைநகா் புடாபெஸ்டில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 193 அணிகள் பங்கேற்கும் ஓபன் பிரிவில் இந்திய அணிகள் அசத்தி வருகின்றன.

செஸ் ஒலிம்பியாட்டின் 9ஆவது சுற்றில் இந்தியாவின் 2 அணிகளும் வெற்றி தோல்வி இல்லாமல் டிராவில் முடிந்தன.

இந்திய ஆடவர் அணி உஸ்பெகிஸ்தானுடன் மோதியது. இதில் 2-2 என டிராவில் முடிந்தது. கடந்தாண்டு சென்னையில் நடைபெற்ற 44ஆவது செஸ் ஒலிம்பியாட்டில் உஸ்பெகிஸ்தான் அணி தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.

மகளிர் பிரிவில் அமெரிக்காவுடன் 2-2 என டிரா செய்தது. 9 சுற்றுகள் முடிவில் இந்தியாவின் மகளிர் அணி 15 புள்ளிகளுடன் 2ஆவது இடத்திலும் ஓபன் பிரிவில் ஆடவர் அணி 17 புள்ளிகளுடன் முதலிடத்தை தக்கவைத்துள்ளது.

10ஆவது சுற்றில் ஆடவர் அணி அமெரிக்காவுடனும் மகளிரி பிரிவில் சீனாவுடனும் மோதுகிறது. மீதமிருக்கும் 2 சுற்றுகளில் வெற்றி பெற்றால் இந்திய அணி தங்கத்தை வெல்லாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.