காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

ஆல்ரவுண்டர் தரவரிசையில் முந்திய ஜோ ரூட்: பந்துவீச்சுப் பயிற்சியில் ஸ்டோக்ஸ்! 

இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மீண்டும் பந்து வீச்சில் கவனம் செலுத்தவிருக்கிறார். 

Published On :


இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்துவீசவில்லை. ஜோ ரூட் பேட்டிங், பௌலிங்கில் அசத்திவருகிறார். இதன்மூலமாக ஆல்ரவுண்டர் தரவரிசையில் ஜோ ரூட் பென் ஸ்டோக்கினை முந்தியுள்ளார். 

இதனைத் தொடர்ந்து பென் ஸ்டோக்ஸ் அளித்த பேட்டியில், “நாளை நான் பந்து வீசுவதை பார்ப்பீர்கள். இந்த தொடர் எனக்கு பௌலிங் போடுவதற்கான வாய்ப்பாக பார்க்கிறேன். குறைவான தாக்கம் தருமாறு நாளை பந்து வீசிப் பார்ப்பேன். எனது உடல் எப்படி இருக்கிறது என்பதைப் பொருத்து தொடர்ந்து பந்து வீசுவேன். 

Story image

இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விசாகப்பட்டினத்தில் நான் பந்து வீசமாட்டேன். பௌலிங் போடாமல் இருப்பது எளிதாக இருக்கிறது. ஆனால் நிச்சயமாக மீண்டும் பௌலிங் போட முயற்சித்து வருகிறேன். எனது பௌலிங் அணிக்கு உதவிகரமாக இருக்குமெனத் தெரியும். ஆனால் பேட்டிங் எளிமையாக இருப்பதால் பெரிதாக பயிற்சி தேவைப்படுவதில்லை. 

அறுவை சிகிச்சைக்கு முன்னமே இதை செய்வேனா தெரியவில்லை. எனது உடல் இயக்கம் குறித்து சிந்தித்து வருகிறேன். எனது முட்டி இப்போது சரியாக இருப்பதாகவே நினைக்கிறேன். இதற்காக மறுவாழ்வு மையத்துக்கு போகத் தேவையில்லை. முடிந்தவரை எல்லாம் சரியாக சிறப்பாக செயல்பட நினைக்கிறேன்” எனக் கூறியுள்ளார். 

ஜோ ரூட் தன்னை ஆல் ரவுண்டர் வரிசையில் முந்திவிட்டதால் பென் ஸ்டோக்ஸ் இந்த முடிவு எடுத்ததாக சமூக வலைதளத்தில் ஜாலியாக கிண்டல் செய்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.