இங்கிலாந்துக்கு எதிராக அடுத்து நடைபெறவுள்ள டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி பங்கேற்காதது இந்திய அணிக்கு மட்டுமின்றி உலக கிரிக்கெட்டுக்கும் மிகப் பெரிய இழப்பு என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் தனிப்பட்ட காரணங்களுக்காக விராட் கோலி விளையாடவில்லை. இங்கிலாந்துக்கு எதிராக அடுத்து நடைபெறவுள்ள போட்டிகளிலும் விராட் கோலி விளையாடப் போவதில்லை என்ற தகவல் வலம் வருகிறது. அந்தத் தகவல் உண்மையா அல்லது வெறும் வதந்தியா என்பது மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டவுடன் தெரிய வரும்.
இந்த நிலையில், இங்கிலாந்துக்கு எதிராக அடுத்து நடைபெறவுள்ள டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி பங்கேற்காதது இந்திய அணிக்கு மட்டுமின்றி உலக கிரிக்கெட்டுக்கும் மிகப் பெரிய இழப்பு என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: இங்கிலாந்துக்கு எதிராக அடுத்து நடைபெறவுள்ள டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி விளையாட மாட்டாரா என்பது இந்த தருணம் வரை உறுதி செய்யப்படாத தகவலாகவே உள்ளது. ஆனால், அவர் அடுத்து வரவுள்ள போட்டிகளில் விளையாடப் போவதில்லை என்று பேசப்படுகிறது. அடுத்த இரண்டு போட்டிகளில் அவர் விளையாடப் போவதில்லையா அல்லது மூன்று போட்டிகளிலும் விளையாடப் போவதில்லையா போன்ற தகவல்கள் இன்னும் உறுதியாகவில்லை.
அடுத்த சில மணி நேரங்களில் அடுத்தடுத்த போட்டிக்கான அணியை இந்தியா அறிவிக்க உள்ளது. விராட் கோலி அணியில் இடம்பெறவில்லையென்றால், அது இந்திய அணிக்கு மிகப் பெரிய இழப்பாக இருக்கும். இந்த டெஸ்ட் தொடருக்கும் மிகப் பெரிய இழப்பாக இருக்கும். அவர் அணியில் இல்லையெனில் உலக கிரிக்கெட்டுக்கும் அது மிகப் பெரிய இழப்பாக இருக்கும். இங்கிலாந்துக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடர் சிறப்பானதாக இருக்கப் போகிறது. முதல் இரண்டு போட்டிகள் சிறப்பானதாக அமைந்தது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வைப்புத்தொகைக்கான வட்டி விகிதத்தை அதிகரித்த பந்தன் வங்கி!

விஜய் பேச்சு, உதயநிதி எதிர்வினை ஏற்புடையதல்ல : மு. வீரபாண்டியன்

5/16: உலகக் கோப்பையில் இருந்து வெளியேறியது பனாமா!

நாகபந்தம் திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



