தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

டெஸ்ட் தொடர் முழுவதும் விராட் கோலி விளையாட மாட்டாரா? என்ன சொல்கிறார் இங்கிலாந்து முன்னாள் கேப்டன்!

இங்கிலாந்துக்கு எதிராக அடுத்து நடைபெறவுள்ள டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி பங்கேற்காதது இந்திய அணிக்கு மட்டுமின்றி உலக கிரிக்கெட்டுக்கும் மிகப் பெரிய இழப்பு.

News image
Updated On :8 பிப்ரவரி 2024, 12:57 pm

DIN

இங்கிலாந்துக்கு எதிராக அடுத்து நடைபெறவுள்ள டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி பங்கேற்காதது இந்திய அணிக்கு மட்டுமின்றி உலக கிரிக்கெட்டுக்கும் மிகப் பெரிய இழப்பு என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் தெரிவித்துள்ளார். 

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் தனிப்பட்ட காரணங்களுக்காக விராட் கோலி விளையாடவில்லை. இங்கிலாந்துக்கு எதிராக அடுத்து நடைபெறவுள்ள போட்டிகளிலும் விராட் கோலி விளையாடப் போவதில்லை என்ற தகவல் வலம் வருகிறது. அந்தத் தகவல் உண்மையா அல்லது வெறும் வதந்தியா என்பது மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டவுடன் தெரிய வரும். 

இந்த நிலையில், இங்கிலாந்துக்கு எதிராக அடுத்து நடைபெறவுள்ள டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி பங்கேற்காதது இந்திய அணிக்கு மட்டுமின்றி உலக கிரிக்கெட்டுக்கும் மிகப் பெரிய இழப்பு என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் தெரிவித்துள்ளார். 

Story image

இது தொடர்பாக அவர் பேசியதாவது: இங்கிலாந்துக்கு எதிராக அடுத்து நடைபெறவுள்ள டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி விளையாட மாட்டாரா என்பது இந்த தருணம் வரை உறுதி செய்யப்படாத தகவலாகவே உள்ளது. ஆனால், அவர் அடுத்து வரவுள்ள போட்டிகளில் விளையாடப் போவதில்லை என்று பேசப்படுகிறது. அடுத்த இரண்டு போட்டிகளில் அவர் விளையாடப் போவதில்லையா அல்லது மூன்று போட்டிகளிலும் விளையாடப் போவதில்லையா போன்ற தகவல்கள் இன்னும் உறுதியாகவில்லை.

அடுத்த சில மணி நேரங்களில் அடுத்தடுத்த போட்டிக்கான அணியை இந்தியா அறிவிக்க உள்ளது. விராட் கோலி அணியில் இடம்பெறவில்லையென்றால், அது இந்திய அணிக்கு மிகப் பெரிய இழப்பாக இருக்கும். இந்த டெஸ்ட் தொடருக்கும் மிகப் பெரிய இழப்பாக இருக்கும். அவர் அணியில் இல்லையெனில் உலக கிரிக்கெட்டுக்கும் அது மிகப் பெரிய இழப்பாக இருக்கும். இங்கிலாந்துக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடர் சிறப்பானதாக இருக்கப் போகிறது. முதல் இரண்டு போட்டிகள் சிறப்பானதாக அமைந்தது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.