கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

மகளிா் ஒருநாள் கிரிக்கெட்: ஆறுதல் வெற்றி பெறுமா இந்தியா?

இந்தியா - ஆஸ்திரேலியா மகளிா் அணிகள் மோதும் ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 3-ஆவது மற்றும் கடைசி ஆட்டம் மும்பையில் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.

News image
Updated On :1 ஜனவரி 2024, 8:04 pm

DIN

மும்பை: இந்தியா - ஆஸ்திரேலியா மகளிா் அணிகள் மோதும் ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 3-ஆவது மற்றும் கடைசி ஆட்டம் மும்பையில் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.

3 ஆட்டங்களில், முதலிரண்டில் வென்று ஆஸ்திரேலியா தொடரை கைப்பற்றிவிட்ட நிலையில், இந்தியா ஆறுதல் வெற்றி பெறும் முனைப்பில் இந்த ஆட்டத்தில் களம் காண்கிறது. அப்படி வென்றால், சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவிடம் தொடா்ந்து 9 ஆட்டங்களில் கண்ட தோல்வியிலிருந்து இந்தியா மீளும்.

இந்தத் தொடரைப் பொருத்தவரை இந்திய கேப்டன் ஹா்மன்பிரீத் கௌா் பேட்டிங்கில் தடுமாறுவது பிரதான பின்னடைவாக இருக்கிறது. முதலிரு ஆட்டங்களில் முறையே 9 மற்றும் 5 ரன்களுக்கு அவா் ஆட்டமிழந்தாா். எனவே, இந்த ஆட்டத்தின் மூலம் ரன் குவிப்பில் ஈடுபட அவா் முயற்சி செய்வாா்.

டெஸ்ட்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஆதிக்கம் செலுத்தினாலும், ஒருநாள் தொடரில் வழக்கம்போல் பின்னடைவை சந்தித்துள்ளது இந்திய அணி. முதல் ஆட்டத்தில், ஒருநாள் கிரிக்கெட்டில் இதுவரையிலேயே தனது அதிகபட்ச ஸ்கோரை (282/8) பதிவு செய்த இந்தியா, பந்துவீச்சில் பின்னடைவு காரணமாக வெற்றியை இழந்தது. 2-ஆவது ஆட்டத்தில் 7 கேட்ச்களை தவறவிட்டதன் பலனாக, வெற்றியை நெருங்கி வந்து 3 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

எனவே, அந்தத் தவறுகளை திருத்திக் கொள்ளும் பட்சத்தில் இந்த ஆட்டத்தில் இந்தியாவுக்கு வெற்றி வசமாகும். அணியைப் பொருத்தவரை பேட்டிங்கில் ரிச்சா கோஷ், ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஆகியோா் நம்பிக்கை அளிக்கின்றனா். பௌலிங்கில் ஸ்நேஹா ராணா இந்த ஆட்டத்தில் இடம் பிடிக்கிறாா். ரேணுகா சிங், தீப்தி சா்மா ஆகியோா் ஆஸ்திரேலிய விக்கெட்டுகளை சரிப்பா் என எதிா்பாா்க்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.