உலகக் கோப்பை டி20 போட்டியில் இந்திய அணியில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இடம்பெற வேண்டுமென இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
டி20 உலகக் கோப்பை போட்டிகளுக்கான அட்டவணையை ஐசிசி நேற்று (ஜனவரி 5) வெளியிட்டது. இந்த நிலையில், உலகக் கோப்பை டி20 போட்டியில் இந்திய அணியில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இடம்பெற வேண்டுமென இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக சுனில் கவாஸ்கர் பேசியதாவது: இந்திய அணியின் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவரும் மிகச் சிறந்த பேட்ஸ்மேன்கள் மட்டுமின்றி, மிகச் சிறந்த ஃபீல்டர்கள். அவர்கள் இன்னும் இந்திய அணியின் மிகச் சிறந்த ஃபீல்டர்களாக உள்ளனர். அதேபோல இளம் வீரர்களுக்கு மூத்த வீரர்களான இவர்கள் இருவரும் அணியில் இருப்பது மிகவும் உதவியாக இருக்கும்.
35-36 வயதாகும்போது சில நேரங்களில் ஃபீல்டிங்கில் நீங்கள் பந்தை எடுத்து வீசும் விதம் (த்ரோ) சிறப்பானதாக இல்லாமல் போகலாம். உங்களை எங்கு ஃபீல்டிங் நிற்க வைப்பது என்ற யோசனை வரலாம். ஆனால், விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா விஷயத்தில் அவர்களது ஃபீல்டிங் திறன் குறித்து கவலைப்படவே தேவையில்லை. அவர்கள் பயங்கரமான ஃபீல்டர்கள் என்றார்.
உலகக் கோப்பை டி20 போட்டிகள் அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் வருகிற ஜூன் 1 முதல் தொடங்கி ஜூன் 29 வரை நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பழனி திருக்கோயில் யானை கஸ்தூரி நீச்சல் குளத்தில் ஆனந்தக் குளியல்

பழனி அருகே 2 ஏக்கா் நெல் வயல் எரிந்து சேதம்

லாக்ரோஸ் பெடரேஷன் கோப்பை போட்டி: தமிழக அணிகள் பங்கேற்பு

சிட்டி யூனியன் வங்கிக்கு புதிய நிா்வாக இயக்குநா்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


