போா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

விராட் கோலியின் கோபத்திற்கு நான் மிகப் பெரிய ரசிகன்: இந்திய வம்சாவளி வீரர்

விராட் கோலியின் ஆக்ரோஷத்திற்கு தான் மிகப் பெரிய ரசிகர் என பிக் பாஷ் லீக் கிரிக்கெட் வீரர் நிகில் சௌத்ரி தெரிவித்துள்ளார்.

News image
Updated On :8 ஜனவரி 2024, 12:36 pm

விராட் கோலியின் ஆக்ரோஷத்திற்கு தான் மிகப் பெரிய ரசிகர் என பிக் பாஷ்  லீக் கிரிக்கெட் வீரர் நிகில் சௌத்ரி தெரிவித்துள்ளார்.

பிக் பாஷ்  லீக்கில் ஹோபர்ட் ஹரிக்கேன்ஸ் அணிக்காக நிகில் சௌத்ரி விளையாடி வருகிறார். அண்மையில் மெல்பர்னுக்கு எதிரான போட்டிக்குப் பிறகு, விராட் கோலியின் ஆக்ரோஷத்திற்கு தான் மிகப் பெரிய ரசிகர் என நிகில் சௌத்ரி தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக மெல்பர்னுக்கு எதிரான போட்டிக்குப் பிறகு நிகில் சௌத்ரி பேசியதாவது: விராட் கோலியின் ஆக்ரோஷத்திற்கு நான் மிகப் பெரிய ரசிகன். அவரது விளையாட்டுத் திறமைக்கும் நான் பெரிய ரசிகன். அவர் ஒரு மிகச் சிறந்த கிரிக்கெட் வீரர். கடந்த 10 ஆண்டுகளாக அவரை பின் தொடர்கிறேன். அவர் கிரிக்கெட்டில் வளர்கிறார், வளர்கிறார், வளர்ந்துகொண்டே இருக்கிறார் என்றார். 

பிக் பாஷ்  லீக்கில் ஹோபர்ட் ஹரிக்கேன்ஸ் அணிக்காக விளையாடும் நிகில் சௌத்ரி இந்திய வம்சாவளி வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.