நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

முதல் டெஸ்ட் போட்டிக்கான ஆடுகளம் குறித்துப் பேசிய ராகுல் டிராவிட்!

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான ஹைதராபாத் ஆடுகளம் நல்ல ஆடுகளமாக இருக்குமென எதிர்பார்ப்பதாக இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். 

News image

படம் | ஐசிசி

Updated On :23 ஜனவரி 2024, 2:42 pm

DIN

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான ஹைதராபாத் ஆடுகளம் நல்ல ஆடுகளமாக இருக்குமென எதிர்பார்ப்பதாக இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். 

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் (ஜனவரி 25) ஹைதராபாத்தில் தொடங்கவுள்ளது. இந்த நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான ஹைதராபாத் ஆடுகளம் நல்ல ஆடுகளமாக இருக்குமென எதிர்பார்ப்பதாக இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்தியா மற்றும்  இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நடைபெறவுள்ள ஹைதராபாத் ஆடுகளத்தின் தன்மை குறித்து கூறுவது கடினமான ஒன்று. போட்டி தொடங்கிய பிறகே ஆடுளத்தின் தன்மை எப்படி இருக்கும் என்பது தெரியும். நான் பார்த்த வரையில் ஆடுகளம் நன்றாக இருக்குமென தோன்றுகிறது. ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக மாறும் வாய்ப்பிருக்கிறது. ஆனால், சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளம் என என்னால் உறுதியாக கூற முடியவில்லை என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.